மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிரான வரைவு தீர்மானத்தை அமெரிக்கா சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது. இந்த வரைவு தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு இன்று பகல் 12 மணிவரை வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதன் பின்னர் இறுதி தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவடைந்த பின் வரும் 21 ந்தேதி தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என ஐ.நா செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது தனது நிலைபாட்டை இன்னும் அறிவிக்காதது தமிழர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
|