|
|||||
பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியல் - இந்தியா மூன்றாவது இடம் !! |
|||||
உலக அளவில் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும், தி நியூஸ் சேப்டி இன்ஸ்டிடியூட் அமைப்பு, உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடக பணியாளர்கள் குறித்து ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, இந்த வருடத்தில் மட்டும், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடக பணியாளர்கள் என 126 பேர் பலியாகியுள்ளனர் எனவும், சிரியாவில் 19 பத்திரிக்கையாளர்கள் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாடு, இரண்டாவது முறையாக, இந்த வருடமும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடு வரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தலா 13 மரணம் என்ற அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன. |
|||||
by Swathi on 22 Dec 2013 0 Comments | |||||
Tags: பத்திரிக்கையாளர்கள் இந்தியா இந்தியா மூன்றாவது இடம் தி நியூஸ் சேப்டி இன்ஸ்டிடியூட் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகள் Dangerous Country for Journalists Dangerous Country | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|