பீகார் மாநிலம், புத்த கயா கோவிலில் கடந்த 7ம் தேதி, அன்று ஒன்பது தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் ஐந்து துறவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர், புத்த கயாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு தாங்கள் தான் காரணம் எனவும், தங்களது அடுத்த குறி மும்பை என "ட்விட்டர்" சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து மும்பையில் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர் வலைதளத்தில் மிரட்டல் விடுத்துள்ள நபர் பற்றிய விசாரணையை இந்திய புலனாய்வு அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
|