LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் லீட்லெஸ் பேஸ்மேக்கரை உருவாக்கி அமெரிக்க இந்தியர் விவேக் ரெட்டி சாதனை !!

இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் ஒயர்லெஸ் பேஸ்மேக்கரை, அறுவை சிகிச்சை இன்றி நோயாளியின் இதயத்தில் நேரடியாகப் பொருத்தி, அமெரிக்க இந்திய மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 


ஒருவரின் இதயம், சராசரி துடிப்பில் இருந்து மெதுவாக துடிக்கும்போது, அதன் துடிப்பின் வேகத்தை அதிகரிக்க, ஓப்பன் ஹார்ட் சர்ஜரியில், இதயத்திற்கு வெளியே, பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப்பட்டு, ஒயர்கள் மூலம், இதயத் துடிப்பு சரி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இதய அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் விவேக் ரெட்டி, ஒயர்லெஸ் பேஸ்மேக்கரை, அறுவை சிகிச்சையின்றி, நோயாளியின் தொடை வழியாக, நேரடியாக இதயத்தின் உள்ளே பொருத்தியுள்ளார்.


ஒயர்லெஸ் பேஸ்மேக்ர் குறித்து, விவேக் ரெட்டி கூறியதாவது: 


பேட்டரியில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேஸ்மேக்கர் கருவி, முந்தைய பேஸ்மேக்கரை விட, 10 சதவீதம் சிறியது. இதயத்தின் மின் அதிர்வை கண்காணித்து, இதயத் துடிப்பு மெதுவாகும் போது, பேஸ்மேக்கரில் உள்ள சர்க்கியூட், எலக்ட்ரிகல் சிமுலேஷன் தெரபி அளித்து இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. இந்த பேஸ்மேக்கரால், தொற்று நோய் அபாயமோ அல்லது பிற நோய்களோ ஏற்படாது. என விவேக் ரெட்டி கூறியுள்ளார்.

by Swathi   on 10 Feb 2014  0 Comments
Tags: Vivek Reddy   Indian Origin Doctor   Lead less Pacemaker   Wireless Pacemaker   Vivek Reddy USA   லீட்லெஸ் பேஸ்மேக்ர்   விவேக் ரெட்டி  
 தொடர்புடையவை-Related Articles
இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் லீட்லெஸ் பேஸ்மேக்கரை உருவாக்கி அமெரிக்க இந்தியர் விவேக் ரெட்டி சாதனை !! இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் லீட்லெஸ் பேஸ்மேக்கரை உருவாக்கி அமெரிக்க இந்தியர் விவேக் ரெட்டி சாதனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.