LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெற்றிகராமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோள் !

இந்தியாவின் முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ-வை பி.எஸ்.எல்.வி. -சி 22 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. -சி 22 ராக்கெட் செயற்கைகோளுடன் இரவு 11.41 மணிக்கு செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. -சி 22 ராக்கெட் செலுத்தப்பட்ட 20 நிமிடங்களிலேயே பூமியிலிருந்து 501 கிலோ மீட்டர் உயரத்தில் தாற்காலிகப் பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. இந்த வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் கொண்டாடிவருகின்றனர். 


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைகோளின் பயன்கள் :

1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்  இந்திய பிராந்திய நேவிகேஷன் செயற்கைக்கோள் திட்டத்தின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகளாகும்.இந்தச் செயற்கைக்கோள் வழங்கும் தகவல்கள் இந்தியாவிற்குள்ளும், இந்திய எல்லையில் இருந்து 1,500 கிலோ மீட்டர் வரையிலும் கப்பல், விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாகனங்களோ, பயணிகளோ தாங்கள் பயணிக்கும் இடத்தைத் துல்லியமாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பேரிடர் காலங்களில் பாதிப்புகளை ஆராயவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தச் செயற்கைக்கோள் திட்டம் பயன்படும். கப்பல், விமானங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இடங்களை அறிந்து கொள்ளலாம்.மொபைல் போனில்கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். மேலும் மலையேறுபவர்கள், பயணிகள், ஓட்டுனர்களுக்கு காட்சிப் படமாகவும், ஒலி வடிவிலும் தகவல்களை வழங்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 01 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.