காத்திருக்கும் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு(Waiting list passengers) பயணச்சீட்டு உறுதியானவுடன் அதுகுறித்த, குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் என ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முன்பதிவு செய்து காத்திருக்கும் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு, அவர்களது டிக்கெட் உறுதியானவுடன், அதுகுறித்த தகவல், சம்பந்தப்பட்ட பிஎன் ஆர் (PNR) உடைய டிக்கெட்டை வைத்திருக்கும் பயணிக்கு, நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் தானாகவே எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
|