ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற, மணல் சிற்ப போட்டியில், இந்திய மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கபதக்கம் வென்றுள்ளார்.
சர்வதேச மணல் சிற்பப் போட்டி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் கடந்த 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், கயிலாயமலை மீது சிவன், பார்வதியுடன் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிற்பத்தை அவர் வடிவமைத்தார். இந்த சிற்பம் அனைவரது பாராட்டை பெற்றது. இதனால் இந்த சிற்பத்துக்கு, தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இரண்டாவது பரிசு இத்தாலிக்கும், மூன்றாவது பரிசு அமெரிக்காவுக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற, மணல் சிற்ப போட்டியில், இந்திய மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கபதக்கம் வென்றுள்ளார்.
சர்வதேச மணல் சிற்பப் போட்டி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் கடந்த 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இத்தாலி, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் கலந்து கொண்டன. இதில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், கயிலாயமலை மீது சிவன், பார்வதியுடன் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிற்பத்தை அவர் வடிவமைத்தார். இந்த சிற்பம் அனைவரது பாராட்டை பெற்றது. இதனால் இந்த சிற்பத்துக்கு, தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இரண்டாவது பரிசு இத்தாலிக்கும், மூன்றாவது பரிசு அமெரிக்காவுக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|