LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டில் 25 சதவீதம் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 

இந்தியாவில் உள்ள சில மாணவர்கள், வெளிநாடு சென்று கல்வி பயில வேண்டும் என பல்வேறு நாடுகளுக்கு சென்று  கல்வி பயின்று வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் நாடுகளில் படிக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

குறிப்பாக, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக அதிக மாணவர்கள் வெளிநாடு  செல்கின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 

இது ஆஸ்திரேலியாவில் சேர்க்கை பெற்ற மொத்த சர்வதேச  மாணவர்களின் எண்ணிக்கையில் 12 புள்ளி 4 சதவீதமாகும் என்றும் 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 புள்ளி 5 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த மாதம் 20-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஆஸ்திரேலியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்ற, சர்வதேச பட்டதாரிகள்  அந்நாட்டில் பணியாற்றும் தற்காலிக விசாவிற்கான அவகாசம் கூடுதலாக ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் சிட்னி, மெல்பர்ன், பெர்த், பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய முக்கிய  நகரங்களை அதிக அளவு ஆக்கிரமிப்பதைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம், ஏற்கெனவே சர்வதேச பட்டதாரிகள் 2 ஆண்டுகளுக்கு பணியாற்ற அனுமதிக்கும் தற்காலிக விசாவை கூடுதலாக ஒரு ஆண்டு  நீட்டிக்கும்போது, அங்கு குடியேறத் தேவையான போதிய பணி அனுபவம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது

by Mani Bharathi   on 03 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.