தகவல் அறியும் உரிமை சட்டத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய சேவை ஒன்றை துவக்கியுள்ளது. இ-ஐ.பி.ஓ.(Electronic-Indian postal order) என அழைக்கப்படும் இந்த சேவையை, வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய அமைக்களிலும் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் பனத்தை செலுத்தி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தலாம் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் www.epostoffice.gov.in அல்லது www.indiapost.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்தும் தேவையான தகவல்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
|