இந்திய ராணுவத்தின் முதல் செயற்கை கோள் நாளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோள் மூலம், இந்தியபெருங்கடல் பகுதியில் இரண்டாயிரம் நாட்டிகல் மைல் தூரம் அளவிற்கு கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இந்தியப்பெருங்கடல் மட்டுமல்லாது வங்ககடல் மற்றும் அரபிக்கடல் , மலாக்கா நீரீணை பகுதிகளையும் கண்காணிக்க முடியும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625 கிலோ எடையுள்ளது. மேலும் இந்த செயற்கை கோள் மூலம் இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் சீன படையினரின் ராணுவ நடவடிக்கை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு, மற்றும் பதுங்கு குழிகள் போன்றவற்றை எளிதாக கண்காணிக்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற ராணுவ வலிமை மிக்க நாடுகளில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை கண்காணி்ப்பதற்காக தனியான செயற்கைகோளை பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக மாறி வரும் இந்தியாவி்ல் ராணுவத்திற்கென செயற்கை கோள் இல்லாமல் வெளி நாடுகளின் செயற்கை கோள்களை குத்தகை அடிப்படையில் பெற்று தகவல் மற்றும் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
|