LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

செவ்வாய் கிரகத்தை ஆராச்சி செய்ய புதிய செயற்கைக்கோளை அனுப்புகிறது இந்தியா - இஸ்ரோ தலைவர் தகவல் !

இந்தியாவின் 102–வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி–22 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஏ என்ற நேவிகேஷன் (கடல்சார் ஆராய்ச்சி) செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை காட்டிலும் குறைந்த தூரத்தில் (501 கிலோ மீட்டர்) செயற்கைகோளை நிலைநிறுத்தி உள்ளோம். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஏ செயற்கை கோள் இந்தியாவின் முதல் கடல்சார் ஆராய்ச்சி செயற்கைகோள் ஆகும். இந்த வரிசையில் மொத்தம் 7 செயற்கைகோள்கள் அடுத்தடுத்து ஏவப்பட இருக்கின்றன. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–பி செயற்கைகோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏவப்படும். மேலும் பி.எஸ்.எல்.வி. சி–25 ராக்கெட் மூலமாக செவ்வாய் கிரகத்திற்கு அக்டோபர் மாதம் 21–ந் தேதிக்குப் பிறகு புதிய விண்கலம் ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. தற்போது தயார்நிலையில் உள்ள அந்த விண்கலம் செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து அனுப்பப்படும். அதேபோல், ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது என கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

by Swathi   on 02 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.