|
|||||
இனிப்பு உளுந்து வடை |
|||||
தேவையானவை : உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ சர்க்கரை - 1/4 கிலோ அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை எண்ணெய் - 1/2 லிட்டர் செய்முறை : 1.முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போதே அரிசி மாவும் உப்பும் சேர்த்து அரைக்கவும். 2.அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, பிசுபிசு பதத்தில்நன்றாக பாகு காய்ச்சிக்கொகொள்ளவும்.இதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில்போட்டு பொரித்து சர்க்கரைப் பாவில் போட்டு ஊற விடவும். 4. சிறிது நேரம் கழித்து பாகில் இருந்து வடையை எடுத்து பரிமாறவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|