LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

இங்கே செல்லாது

தென்பாங்கு - கண்ணிகள்

தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம்
    துப்பாக்கி சூழ்ந்தது போல் - துயர்
    தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர்
    தாங்கி நடந்தது போல்
    ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல்
    ஏற்பட்டு வந்தது போல் - நொடி
    ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை
    ஆட்கள் பலர் சூழ்ந்தார்!

    தீய முருகியுங் குப்பும் இருந்தனர்
    சேயிழை பக்கத் திலே - வீட்டு
    வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு
    வந்தது பேச்சுக் குரல்!
    'ஆயிரம் ஆயிரம் ஆக வராகன்
    அடித்துக்கொண் டோடி வந்தீர் - நீர்
    தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும்
    சூழ்ச்சி தெரியா தோ?'

    என்று வௌியினில் கேட்ட குரலினை
    இவ்விரு மாதர் களும் - உயிர்
    கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர்
    குரலிது வென்றுரைத் தார்.
    புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும்
    பொத்தென வேஎழுந் தார் - அவர்
    சின்ன விளக்கை அவித்துக் கதவைத்
    திறந்தனர் ஓடிவிட் டார்!

    மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள்
    வாய்ந்த இடத்தி னிலே - பின்னர்
    அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல்
    அலைவந்து மோது கையில்
    மங்கையின் மேல்ஒரு கைவந்து பட்டது.
    *வாள்பட்ட தால் விட்டது. - அட
    இங்குச்செல் லாதென்று மங்கைசொன் னாள்!வந்த
    இழிஞர்கள் பேச வில்லை.

    * சுப்பம்மாமேல் ஒரு கைபட்டது. உடனே சுப்பம்மாவின்
    வாள் அக்கையின்மேல் பட்டவுடன் அக்கை எடுபட்டது.

    மேலும் நடப்பது யாதென்று மங்கை
    விழிப்புடன் காத்திருந் தாள் - அந்த
    ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக
    உணர்ந்து நெஞ்சந் துடித்தாள்!
    மூலைக்கு மூலை வழிபார்த் தாள்புகை
    மொய்த்த இருட் டினிலே - அவள்
    ஏலுமட் டும்இரு தாழைத் திறந்திட
    என்னென்ன வோ புரிந்தாள்.

    கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன!
    கூட்டத்தி லே ஒருவன் - 'சொல்
    ஆரங்கே' என்றனன்; தாழைத் திறந்தனன்;
    'அன்னமே' என்றழைத் தான்.
    கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது
    கொல்புகை நீங்கிய தால் - 'முன்
    ஆரங்கே' என்றவன் சுதரிசன் என்பதை
    அன்னம் அறிந்தவ ளாய்

    கத்தியை நீட்டினாள்; 'தீஎன்னை வாட்டினும்
    கையைத் தொடாதே யடா! - இந்த
    முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
    மூச்சுப் பெரிதில்லை காண்!'
    குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும்
    கொண்டிது கூறி நின்றாள் - வந்த
    தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர்
    கூடத் தொலைந்து விட்டார்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.