இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று. |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவற்கு; இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமை இழிவாகாது. உள்ளத்திற்கு உறுதியுண்டாக்குதலின், சால்பு உரமாயிற்று. இன்மை பொருளின்மை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" (மூதுரை,4) என்பதாம். |
கலைஞர் உரை: |
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல. |
சாலமன் பாப்பையா உரை: |
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது. |
Translation |
To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good. |
Explanation |
Poverty is no disgrace to one who abounds in good qualities. |
Transliteration |
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|