LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 988 - குடியியல்

Next Kural >

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவற்கு; இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமை இழிவாகாது. உள்ளத்திற்கு உறுதியுண்டாக்குதலின், சால்பு உரமாயிற்று. இன்மை பொருளின்மை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" (மூதுரை,4) என்பதாம்.
கலைஞர் உரை:
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
Translation
To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good.
Explanation
Poverty is no disgrace to one who abounds in good qualities.
Transliteration
Inmai Oruvarku Ilivandru Saalpennum Thinmai Un Taakap Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >