|
||||||||
தொடர்:இன்ஸ்பிரேஷன்-1 |
||||||||
இன்ஸ்பிரேஷன் நாம் சாலையில் நடந்து போகிறோம் அப்போது எதிரில் வருகின்ற நண்பன் ‘என்னப்பா சுறுசுறுப்பா பளிச்சுனு இருக்க என்ன விஷயம்?’ என்று கேட்கிறான். அப்போது நாம் என்ன நினைப்போம். அவன் நமது நண்பன், நட்பின் நிமித்தமாக ஏதோ உளறுகிறான். அடுத்து வரும் ஒருவரும் இதேபோல் கேட்டால், அவனும் நமது நண்பன் தானே என்று நினைப்போம். ஆனால் மூன்றாவதாக வரும் நபர் அப்படி நம்மைக் கேட்டால், ‘என்ன நாம் உண்மையிலேயே சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறோமா?’ என்று நமக்குள் தோன்றும் நடையில் ஒரு மாற்றம் வரும். பார்வையில் தெளிவு வரும் ‘நாம யாரு?’ என்று காலரை தூக்கிவிட்டபடி நடக்க தோன்றும் இதை நாம் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். விரும்பிக்கேட்கும் பாடகரைப்போல் பாட ஆசைப்படுகிறோம். நமக்கு பிடித்த நடிகராகவே நம்மை நாம் கற்பனை செய்து கொள்கிறோம். ஒரு பணக்கரைப் பார்த்தால் நாமும் அவரைப் போல் காரில் செல்ல ஆசைப்படுகிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைந்ததன் பின்னனி என்ன? இந்த நிலைக்கு உயர தூண்டுகோலாக அமைந்த விஷயம் என்ன? டாக்டராக, வக்கீலாக, சாப்ட்வேர் இன்ஜினியராக, விளையாட்டு வீரராக, அரசியல் தலைவராக என்று எத்தனையோ லட்சியங்கள் நமக்கு உள்ளன. ஆனால் நம் எதுவாக ஆக விரும்புகிறோமோ அதைப்போல் ஒருவன் ஆகியிருப்பான் அவனது வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றியின் ரகசியம் எளிதில் தெரிந்துவிடும். வெற்றியடைந்தவர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே அவர்கள் வாழ்க்கைக்கு தூண்டுகோலாக இருக்கும். ‘மந்திரங்களில் நான் காயத்திரியாக இருக்கிறேன். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’
என்று எழுதினார்.
பாடல் எழுதும் கவிஞர்களுக்குத்தான் இதுபோன்ற தூண்டுகோள்கள் (இன்ஸ்பிரேசன்) வரவேண்டுமா? நம் வாழ்க்கையிலும் பல தூண்டுகோள்கள் உள்ளன. அத்தகைய தூண்டுகோள்களை பின்பற்றி வாழ்வின் வெற்றி சிகரத்தை அடைந்தவர்கள் பலர். அவர்களை நாம் முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு நமது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வோமா. அல்லியின் வயது 12. அவனுக்கு நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும், பல புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று ஆசைவந்தது. அல்லி, தாயிடம் சென்றான். ‘‘அம்மா நான் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன்’’ ‘‘நான் ரயில் வண்டியில் பத்திரிக்கை விற்கப்போகிறேன். அதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறேன். ரயில்வே நிர்வாகமும் அனுமதி வழங்கிவிட்டது. பத்திரிக்கை விற்றபின் நூலகத்துக்குச் செல்வேன். அங்கு எனக்குப்பிடித்த நூல்களைப் படிப்பேன். மீதம் உள்ள நேரத்தில் எனது ஆராய்ச்சியைத் தொடர்வேன்’’ தனது ஆராய்ச்சிக்குத் தேவையான ரசாயனப் பொருட்கள் வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் முதலில் வேலைக்குப்போனான் ஆலீவ். கிராண்ட் ட்ரங்க் ரயில்ரோடு நிறுவனம் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்தை இயக்கிக் கொண்டிருந்தது. டெட்ராய்ட்டில் காய்கறிகள், பழங்கள், மிட்டாய்கள் ஆகியவற்றை வாங்கி அதை ரயிலில் எடுத்து வந்து போர்ட் ஹூரானில் மற்றவியாபாரியை விட குறைந்த விலைக்கு கொடுத்தான் தாமஸ். விலை குறைவாக தாமஸ் விற்பனை செய்ததால் வாடிக்கையாளர்கள் தாமஸ்ஸிடமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க போட்டி போட்டனர். ரயில்வேயில் தந்தியடிப்பவரிடம் ஒரு ஒப்பந்தம் செய்தான். டெட்ராய்டில் பத்திரிகை வாங்குவான். அதில் உள்ள முக்கிய பரபரப்பு செய்திகளை கவர்ச்சிகரமான வார்த்தைகளில் சுருக்கி எழுதுவான். அந்த வாசகம் ரயில் செல்லும் பகுதிகளில் உள்ள அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும். ரயில் வரும் முன்பு அந்த பரபரப்பு செய்தி மக்களுக்கு தெரிந்துவிடும். அது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும். உடனே ரயிலில் வரும் பத்திரிகைக்காக காத்துக்கிடப்பார்கள். இந்த யுக்தி அந்நாளில் புதுமையானது. பத்திரிகை தரமுடியாது என்று முதலில் மறுக்கப்பட்டது. பின்பு தாமஸின் ஆர்வத்தை பார்த்த பத்திரிகை மேலாளருக்கு தாமஸ் மீது நம்பிக்கை வந்தது. 1,000 பத்திரிகைகளை தூக்கிக் கொண்டு வந்தான். பத்திரிகையை விற்பனை செய்யும் முன்பு ரயில் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பரபரப்பு செய்தியை அறிவிப்புப் பலகையில் ஒட்ட ஏற்பாடு செய்தான். 5 சென்ட்டாக இருந்த பத்திரிகையை 10 சென்ட்டாக உயர்த்தினான். சாதாரணமாக 6 பத்திரிகை மட்டுமே விற்கும் ரயில் நிலையத்தில் 30 பத்திரிக்கை விற்றான். அதுமட்டுமல்ல பத்திரிக்கையை மக்கள் வாங்குவதை பார்த்ததும் தாமஸ் 25 சென்ட்டாக விலையை உயர்த்தினான். நல்ல வருமானம் கிடைத்தது. மறுநாளே பத்திரிகை அலுவலகம் சென்று கடனை கட்டினான். லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகை, தாமஸின் பத்திரிகை முயற்சியை பெரிதும் பாராட்டியது. தனது ஆராய்சிக்கு பணம் தேவை என்று நினைத்து பகுதிநேர வேலையாக பத்திரிகை விற்பனையை தொடங்கினான் தாமஸ். ஆனால் பத்திரிக்கை விற்பனை தாமஸை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் உருவாக்கியது. இது பகுதி நேர வேலைதானே என்று தாமஸ் நினைக்கவில்லை. யாருக்கோ பத்திரிகை விற்பனை செய்து கொடுக்க சென்றவர் பத்திரிக்கை தொடங்கினான். இன்றைக்கு பேப்பர் போடும் பையனுக்கு பத்திரிக்கை ஆரம்பிக்கும் துணிச்சல் எப்படி வந்தது. அவன் தான் தாமஸ் அல்வா எடிசன். தன் வாழ்நாளில் 1,368 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர். _ சூர்யா சரவணன் -தொடரும் |
||||||||
by Swathi on 30 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|