LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இன்ஸ்பிரேஷன் (Inspiration )

தொடர்:இன்ஸ்பிரேஷன்-1

இன்ஸ்பிரேஷன்
           
 அமெரிக்கர் சம்பளம்; இத்தாலியர்கள் வீடு: சீன உணவு: இந்தியப் பெண் போன்ற நடுத்தர குடும்பத்து லட்சியங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் மறு பரிசீலனை செய்ய வைக்கும் கட்டுரை இது.
மாதச்சம்பளம், வட்டி, காதல், ஈகோ, தீபாவளி, பொங்கல் ஆகியவற்றிற்கும் மனம் உளண்டு கொண்டிருக்க ஆசை படுகிறீர்களா அல்லது  தனது குடும்பத்தின் நிலையை குறைந்த பட்சம் ஒரு படியாவது மேன்மைப்படுத்த விரும்புகிறீர்களா? இன்கிரீமென்ட், போனஸ் போன்ற மாத சம்பளத்திற்குள் வாழ்ந்து விட்டு இந்த சமூகத்தை குற்றம் சாட்டப் போகிறீர்களா? நிச்சயம் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தத்தானே நாம் ஆசைப்படுவோம். நம்மை வழி நடத்திய தலைவர்கள், முன்னோர்கள், வெற்றியாளர்களுடன் நமது வாழ்கையை ஒப்பிட்டுப் பார்ப்போம். நம்மிடம் இல்லாத ஒன்று அப்படி என்னை அவர்களிடம் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்போம். அவர்களை மாற்றிய விஷயம் எது?

 நாம் சாலையில் நடந்து போகிறோம் அப்போது எதிரில் வருகின்ற நண்பன் ‘என்னப்பா சுறுசுறுப்பா பளிச்சுனு இருக்க என்ன விஷயம்?’ என்று கேட்கிறான். அப்போது நாம் என்ன நினைப்போம். அவன் நமது நண்பன், நட்பின் நிமித்தமாக ஏதோ உளறுகிறான்.  அடுத்து வரும் ஒருவரும் இதேபோல் கேட்டால், அவனும் நமது நண்பன் தானே என்று நினைப்போம். ஆனால் மூன்றாவதாக வரும் நபர் அப்படி நம்மைக் கேட்டால், ‘என்ன நாம் உண்மையிலேயே சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறோமா?’ என்று நமக்குள் தோன்றும் நடையில் ஒரு மாற்றம் வரும். பார்வையில் தெளிவு வரும் ‘நாம யாரு?’ என்று காலரை தூக்கிவிட்டபடி நடக்க தோன்றும் இதை நாம் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம்.

  விரும்பிக்கேட்கும் பாடகரைப்போல் பாட ஆசைப்படுகிறோம். நமக்கு பிடித்த நடிகராகவே நம்மை நாம் கற்பனை செய்து கொள்கிறோம். ஒரு பணக்கரைப் பார்த்தால் நாமும் அவரைப் போல் காரில் செல்ல ஆசைப்படுகிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைந்ததன் பின்னனி என்ன? இந்த நிலைக்கு உயர தூண்டுகோலாக அமைந்த விஷயம் என்ன?   டாக்டராக, வக்கீலாக, சாப்ட்வேர் இன்ஜினியராக, விளையாட்டு வீரராக, அரசியல் தலைவராக என்று எத்தனையோ லட்சியங்கள் நமக்கு உள்ளன. ஆனால் நம் எதுவாக ஆக விரும்புகிறோமோ அதைப்போல் ஒருவன் ஆகியிருப்பான் அவனது வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றியின் ரகசியம் எளிதில் தெரிந்துவிடும். வெற்றியடைந்தவர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே அவர்கள் வாழ்க்கைக்கு தூண்டுகோலாக இருக்கும். 

 ‘மந்திரங்களில் நான் காயத்திரியாக இருக்கிறேன்.  

 மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்


  என்று பகவத் கீதையில் அர்ஜுனனிடம் கண்ணன் கூறினான்.
சிறுவயதில் படித்த அந்த வரிகள் கவிஞர் கண்ணதாசன் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டது. பின்னால் அவர் எழுதிய பாடலில்


 ‘காலங்களில் அவள் வசந்தம்
 
கலைகளிலே அவள் ஓவியம்
 
மாதங்களில் அவள் மார்கழி
 
மலர்களிலே அவள் மல்லிகை

என்று எழுதினார்.


    கனகதாரா ஸ்தோத்திரம், கீர்த்தனைகள் சிறு வயதிலேயே படித்த பாரதி, பொன்னும் பொருளும் வேண்டி எழுதப்பட்ட கீர்த்தனைகளை  மாற்றி சமூகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடினார்.

பாடல் எழுதும் கவிஞர்களுக்குத்தான் இதுபோன்ற தூண்டுகோள்கள் (இன்ஸ்பிரேசன்) வரவேண்டுமா? நம் வாழ்க்கையிலும் பல தூண்டுகோள்கள் உள்ளன. அத்தகைய தூண்டுகோள்களை பின்பற்றி வாழ்வின் வெற்றி சிகரத்தை அடைந்தவர்கள் பலர். அவர்களை நாம் முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு நமது வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வோமா.

                       
எடிசன்

    அல்லியின் வயது 12. அவனுக்கு நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும், பல புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவேண்டும் என்று ஆசைவந்தது. அல்லி, தாயிடம் சென்றான். 

‘‘அம்மா நான் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன்’’
‘‘என்ன? நீ வேலைக்கு செல்லப்போகிறாயா?’’
‘‘ஏன் உனக்கு என்ன குறைச்சல்?’’
‘‘எனக்கு கொஞ்சம் பணம் தேவை’’  
‘‘பணமா எதற்கு? ’’
‘‘நான் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு கொஞ்சம் உபகரணங்கள் தேவை அதை வாங்க வேண்டும்’’
‘‘படிப்பு கெட்டுவிடுமே’’
‘‘கெடாது’’
‘‘எப்படி? ’’

‘‘நான் ரயில் வண்டியில் பத்திரிக்கை விற்கப்போகிறேன்.  அதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறேன். ரயில்வே நிர்வாகமும் அனுமதி வழங்கிவிட்டது. பத்திரிக்கை விற்றபின் நூலகத்துக்குச் செல்வேன். அங்கு எனக்குப்பிடித்த நூல்களைப் படிப்பேன். மீதம் உள்ள நேரத்தில் எனது ஆராய்ச்சியைத் தொடர்வேன்’’

 தனது ஆராய்ச்சிக்குத் தேவையான ரசாயனப் பொருட்கள் வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் முதலில் வேலைக்குப்போனான் ஆலீவ். கிராண்ட் ட்ரங்க் ரயில்ரோடு நிறுவனம் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்தை இயக்கிக் கொண்டிருந்தது.
 காலை 7 மணிக்கு ஹூரானிலிருந்து ரயில் புறப்படும் டெட்ராய்ட்டை காலை 10 மணிக்கு சென்றடையும். பின்பு மாலை 6.30க்கும் டெட்ராய்ட்டில் இருந்து புறப்பட்டு இரவு 9.30க்கு ஹூரான் வந்தடையும்.  காலை 10 மணி முதல் மாலை 6,30 மணிவரையில் நூலகத்துக்குச் சென்று புத்தகம் படிக்கலாம். நூலக அதிகாரி, தாமஸின்  ஆர்வத்தைப் பார்த்து தாமஸின் விருப்பத்துக்கு ஏற்ப அவனுக்குத் தேவையான பல நூல்களைக் கொடுத்தார்.  தாமஸின் தந்தை ஒரு வியாபாரியாக இருந்ததால் தாமஸுக்கு வியாபாரம் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தது.

 டெட்ராய்ட்டில் காய்கறிகள், பழங்கள், மிட்டாய்கள் ஆகியவற்றை வாங்கி அதை ரயிலில் எடுத்து வந்து போர்ட் ஹூரானில் மற்றவியாபாரியை விட குறைந்த விலைக்கு கொடுத்தான் தாமஸ். விலை குறைவாக தாமஸ் விற்பனை செய்ததால் வாடிக்கையாளர்கள் தாமஸ்ஸிடமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க போட்டி போட்டனர்.

 ரயில்வேயில் தந்தியடிப்பவரிடம் ஒரு ஒப்பந்தம் செய்தான். டெட்ராய்டில் பத்திரிகை வாங்குவான். அதில் உள்ள முக்கிய பரபரப்பு செய்திகளை கவர்ச்சிகரமான வார்த்தைகளில் சுருக்கி எழுதுவான். அந்த வாசகம் ரயில் செல்லும் பகுதிகளில் உள்ள அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும். ரயில் வரும் முன்பு அந்த பரபரப்பு செய்தி மக்களுக்கு தெரிந்துவிடும். அது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும். உடனே ரயிலில் வரும் பத்திரிகைக்காக காத்துக்கிடப்பார்கள். இந்த யுக்தி அந்நாளில் புதுமையானது.
 ஒருமுறை உள் நாட்டுப்போர் நடந்தது. அதில் 25,000 பேர் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால் பத்திரிகை அலுவலகத்தில் 60,000 பேர் இறந்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நேராக பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்தான் தாமஸ்.
 ‘‘நான் 300 பத்திரிக்கை வாங்கி விற்பனை செய்ய பணம் கொண்டுவந்தேன். ஆனால் எனக்கு 1,000 பத்திரிகை தேவை. கடன் கொடுத்தால் நாளை பணம் கொடுத்துவிடுவேன்’’ என்று கூறினான்.

 பத்திரிகை தரமுடியாது என்று முதலில் மறுக்கப்பட்டது. பின்பு தாமஸின் ஆர்வத்தை பார்த்த பத்திரிகை மேலாளருக்கு தாமஸ் மீது நம்பிக்கை வந்தது. 1,000 பத்திரிகைகளை தூக்கிக் கொண்டு வந்தான். பத்திரிகையை விற்பனை செய்யும் முன்பு ரயில் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பரபரப்பு செய்தியை அறிவிப்புப் பலகையில் ஒட்ட ஏற்பாடு செய்தான். 5 சென்ட்டாக இருந்த பத்திரிகையை 10 சென்ட்டாக உயர்த்தினான். சாதாரணமாக 6 பத்திரிகை மட்டுமே விற்கும் ரயில் நிலையத்தில் 30 பத்திரிக்கை விற்றான். அதுமட்டுமல்ல பத்திரிக்கையை மக்கள் வாங்குவதை பார்த்ததும் தாமஸ் 25 சென்ட்டாக விலையை உயர்த்தினான். நல்ல வருமானம் கிடைத்தது. மறுநாளே பத்திரிகை அலுவலகம் சென்று கடனை கட்டினான்.
 இந்த அனுபவத்தில் இருந்து தாமஸ் ஒரு பாடம் கற்றான். பரபரப்புச் செய்திக்கும் சூடான செய்திக்கும் உள்ள வரவேற்பை அறிந்தான். இது போல் பத்திரிக்கை தொடங்கினால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என நினைத்தான். உடனே செயலில் இறங்கினான். ‘‘வீக்லி ஹெரால்ட்’’ என்ற பத்திரிக்கை தொடங்கினான். அந்த பத்திரிக்கைகு தாமஸ்தான் ஆசிரியர். ரயிலிலேயே பத்திரிக்கையை அச்சடித்து தயார் செய்தான். பத்திரிகையின் விலை 3 சென்ட். மாத சந்தா 8 சென்ட் என்று நிர்ணயித்து உடனடியாக 300 சந்தாதாரர்களை சேர்த்தான்.

லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகை, தாமஸின் பத்திரிகை முயற்சியை பெரிதும் பாராட்டியது. தனது ஆராய்சிக்கு பணம் தேவை என்று நினைத்து பகுதிநேர வேலையாக பத்திரிகை விற்பனையை தொடங்கினான் தாமஸ். ஆனால் பத்திரிக்கை விற்பனை தாமஸை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் உருவாக்கியது. இது பகுதி நேர வேலைதானே என்று தாமஸ் நினைக்கவில்லை. யாருக்கோ பத்திரிகை விற்பனை செய்து கொடுக்க சென்றவர் பத்திரிக்கை தொடங்கினான். இன்றைக்கு பேப்பர் போடும் பையனுக்கு பத்திரிக்கை ஆரம்பிக்கும் துணிச்சல் எப்படி வந்தது. அவன் தான் தாமஸ் அல்வா எடிசன். தன் வாழ்நாளில் 1,368 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்.

_   சூர்யா சரவணன்   

-தொடரும் 

by Swathi   on 30 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.