LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இன்ஸ்பிரேஷன் (Inspiration )

தொடர்:இன்ஸ்பிரேஷன்-2

ஜார்ஜ் ஸ்டீபன்சன் 


    இங்கிலாந்தில் உள்ள நியூகாசில் ஒரு சிற்றூரில் பிறந்தார் ஜார்ஜ் ஸ்டீபன்சன். ஏழைக் குடும்பம். சிறுவயதில் கூலித்தொழில் மற்றும் மாடுமேய்க்கும் தொழில் செய்து வந்தான். பகல் முழுவதும் மாடுமேய்த்துவிட்டு இரவு பள்ளிக் கூடத்தில் படிப்பான். தன் வயது சிறுவர்கள் விளையாட்டிலும் ஊர் சுற்றுவதிலும் ஆர்வம் காட்ட ஜார்ஜ் ஸ்டீபன்சன் ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள நூலகம் சென்று படித்தான். ஸ்டீபன்சன் ஒரு முறை நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தான். அப்பொழுது நீராவி இயந்திரம் பழுதாகிவிட்டது. பல மெக்கானிக்குகள் வந்து இயந்திரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன ரிப்பேர் ஆகியுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை கவனித்த ஸ்டீபன்சன், இயந்திரத்தை சரி செய்ய அனுமதி கேட்டான். ஆனால் அவனுக்கு அறை மனதுடன் தான் அனுமதி கிடைத்தது. ஸ்டீபன்சன் சில நிமிடங்களில் இயந்திரத்தை சரி செய்தான். இயந்திரம் முன்பைவிட வேகமாக இயங்கத் தொடங்கியது. ஆச்சரியமடைந்த நிலக்கரி சுரங்க முதலாளி, ஸ்டீபன்சனுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். கிடைத்த பணத்தை கொண்டு நீண்ட நாட்கள் முயன்று ரயில் இயந்திரத்தை கண்டுபிடித்தார். மாடு மேய்பதுதான் நமது வாழ்க்கை என்று ஜார்ஜ் ஸ்டீபன்சன் முடிவு செய்திருந்தால் நாம் ரயிலில் இன்றைக்கு பயணம் செய்ய முடியுமா?
                
                  
மயான வைராக்கியம்     

  மயான வைராக்கியம் என்று ஒரு வைராக்கியம் இருக்கிறது. நமது உறவினர் இறந்துபோனால் அவரது இறப்புக்குச்செல்லும் போது எப்படி வாழ்ந்த மனிதன் இவர் இப்படி போய்விட்டாரே! என்ன வாழ்க்கை இது.

நாம் இனியாவது வாழ்க்கையின் நிலையாமையை புறிந்துகொண்டு, பிறருக்கு எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நாம் நினைப்போம் ஆனால் மறுநாள் அந்த மனநிலை நமக்கே மாறிவிடும்.   ஆனால் புத்தருக்கும் யோகிராம் சுரத்குமாருக்கும் மயான வைராக்கியம் இறைவனை அடைய தூண்டுகோளாக அமைந்தது.

     ராம் சுரத்குன்வருக்கு பதிமூன்று வயது. வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்பக்கத்தில் கிணற்றின் மேல் பகுதியில் ஒரு சின்னஞ்சிறிய குருவி ஒன்று அமர்ந்திருந்தது. விளையாட்டாக கிணற்றுக்கயிரிறை எடுத்து வீசினான். அந்தக் கயிறு எதிர்பாராத விதமாக குருவியின் மேல் விழுந்தது. ராம்சுரத் ஓடிச்சென்று குருவியைத் தூக்கினான். குருவி,  பலமாக அடிபட்டிருந்தது. அந்த குருவியை கையில் எடுத்து உள்ளங்கையில் ஏந்தியபடி கங்கையை நோக்கி ஓடினான். நீரை எடுத்து குருவியின் வாயில் ஊற்றினான். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஆனால் அந்த குருவி ராம் சுரத்குன்வர் கைகளிலேயே உயிரைவிட்டது.

    ராம் சுரத்குன்வருக்கு கண்ணீர் பெருகியது. கனத்த இதயத்துடன் கண்ணீர் பெருக கங்கையிலேயே அமர்ந்துவிட்டான்.  சின்னஞ்சிறிய குருவி இறந்த காரணம் தெரியாமல் தவித்தான். குருவியின் அழகு எங்கே? அதன் பறக்கும் சக்தி எங்கே? தெரியாமல் தவித்தான். இறக்கைகள் இருந்தும் பறக்கமுடியாத காரணம் என்ன? குருவியிடம்  இருந்த எது சென்றது? உயிரா? உயிர் என்றால் என்ன? என்று மனம் குழம்ப ஆரம்பித்தது.  விடை தெரியாமல் தவித்தது. கையில் இருந்த குருவியை கங்கையில் விட்டான். கங்கையின் கரையில் அமர்ந்து நீண்ட நேரம் அழுதான். மனதில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு மனம் கலக்கம் அடைந்தது. வாழ்க்கை திசை மாறியது. மனம் பிறப்பு, இறப்பு பற்றியும் சிந்திக்கத் தொடங்கியது.  அவனது மனம் இறைவனை நோக்கித் திரும்பியது. அந்த சிந்தனை ராம்சுரத்குன்வரை யோகிராம் சுரத்குமாராக மாற்றியது.

     குருவியின் இறப்புத்தான் யோகிராம் சுரத்குமார் ஞானநிலை அடைய வழிவகை செய்தது.
  
       
சர் எட்வின்  அர்னால்ட் 

      நாம் இதுவரை வாழ்க்கையில் ஒரு சம்பவமோ, அல்லது இன்னோரு மனிதரோ தூண்டுகோலுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிந்தோம். இந்தியாவேகூட தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அது எப்படி?

    இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சர் எட்வின் அர்னால்ட், 1832 ஆம் ஆண்டு பிறந்தார். லண்டன், கிங்ஸ் கல்லூரியில் படித்தார். 1867 ஆம் ஆண்டு, இந்தியாவில் புனேவில் ஆங்கிலேயருக்கான சமஸ்கிருத கல்லூரியில் படித்தார். சர் எட்வின் அர்னால்டுக்கு இந்தியாவின் மீது இந்திய கலாச்சாரத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது.  இந்தியா மட்டுமல்ல இந்திய இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் எட்வினுக்கு மிகவும் பிடித்த நூல்களாகும். இந்த இதிகாசங்கள் இந்தியாவை பற்றிய ஒரு நல்ல மரியாதையும் மதிப்பீட்டையும் எட்வினுக்கு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல கணிதம், கலாச்சாரம், வானவியல் ஆகிய துறைகள் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது.

   இந்தியாவின் சிறப்புகள் பற்றி இங்கிலாந்தில் பரப்பினார். எட்வின் இந்தியாவை தனது தாய் நாட்டைப்போலவே நேசித்தார். சமஸ்கிருத நூல்களை இங்கிலாந்தில் மொழிபெயர்த்தார்.


 புத்தரின் சரித்திரம் குறித்தும் அவரது உபதேசங்களையும் கொண்ட ‘‘ஆசிய ஒளி’’ என்ற நூலை எழுதினார்,  பேராசிரியராகவும், கவிஞராகவும் விளங்கிய எட்வின் இந்தியாவை விட்டுப்பிரிந்து தனது சொந்தநாடான இங்கிலாந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


 அவர் இந்தியாவை விட்டுப் பிரிந்தபோது,
  ‘‘ இந்தியாவே! உன்னைவிட்டு விலகுகிறேன்.
    உன்னை திரும்பவும் பார்ப்பதற்கு இல்லை!
    உனது மின்னிடும் கடற்கரைகளும்
    சூரிய ஒளிப் புத்திரர்களான ஜனங்களும் என்னை கவந்தார்கள்.
    இனிதான பழக்க வழக்கம் உடையவர்கள் இவர்கள்!
    எப்பொழுதும் இதமான வார்த்தைகளைச் சொல்லி
    மற்றவர்களை வெற்றிகொள்பவர்கள்!
    என்னையும் வெற்றி கொண்டார்கள்.
    உனது இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேன்
    இனி எனது நினைவுகள் எப்போதும் இங்குள்ள
    பரந்த வயல் வெளிகளில் மட்டுமல்ல.
    உனது நகரம், கிராமம், உனது காடுகள்,        
    
          
உனது தோப்புகள், உனது மைதானங்கள்,
உனது ஆறுகள் ஆகியவற்றில் எப்பொழுதும் வசித்துக் கொண்டிருக்கும்
எனது அருமையான இந்திய சகோதரிகளே, சகோதரர்களே,
ஒரு உண்மை நண்பன் உங்களைப் பிரிவதற்கு மிகவும் வேதனைப்படுகிறான்.
அவனது நினைவும் மனமும் எல்லாமே
இந்தப் புண்ணிய நாட்டின் மீது அமர்ந்திருக்கிறது.
வருகிறேன்!
இந்தியாவே! உன் நினைவுதான் எப்பொழுதும் என் மனதில் இருக்கும்.
கங்கா, காசி, சரஸ்வதி! உங்களை நான் மறவேன்.
நான் செய்த தொண்டுக்கு இந்திய மக்கள் என்னை
மறந்துவிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  எட்வின் அர்னால்ட் மொழிபெயர்த்த நூல்கள்:
1. கீத உபதேதசம்& நீதி நெறிமுறைகள் கூறும் கதைகள்
2. நம்பிக்கை முத்துக்கள்
3. கீத கோவிந்தம்& ஜெயதேவர் எழுதிய காதல் காவியம்
4. பிரிட்டீஷ் இந்தியாவின் டல்ஹௌசி அரசாட்சி
5. இந்தியக் கவிதைகள்      

_   சூர்யா சரவணன்   

தொடரும் 

by Swathi   on 30 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.