|
||||||||
தொடர்:இன்ஸ்பிரேஷன்-2 |
||||||||
ஜார்ஜ் ஸ்டீபன்சன்
மயான வைராக்கியம் என்று ஒரு வைராக்கியம் இருக்கிறது. நமது உறவினர் இறந்துபோனால் அவரது இறப்புக்குச்செல்லும் போது எப்படி வாழ்ந்த மனிதன் இவர் இப்படி போய்விட்டாரே! என்ன வாழ்க்கை இது. நாம் இனியாவது வாழ்க்கையின் நிலையாமையை புறிந்துகொண்டு, பிறருக்கு எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நாம் நினைப்போம் ஆனால் மறுநாள் அந்த மனநிலை நமக்கே மாறிவிடும். ஆனால் புத்தருக்கும் யோகிராம் சுரத்குமாருக்கும் மயான வைராக்கியம் இறைவனை அடைய தூண்டுகோளாக அமைந்தது. ராம் சுரத்குன்வருக்கு பதிமூன்று வயது. வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்பக்கத்தில் கிணற்றின் மேல் பகுதியில் ஒரு சின்னஞ்சிறிய குருவி ஒன்று அமர்ந்திருந்தது. விளையாட்டாக கிணற்றுக்கயிரிறை எடுத்து வீசினான். அந்தக் கயிறு எதிர்பாராத விதமாக குருவியின் மேல் விழுந்தது. ராம்சுரத் ஓடிச்சென்று குருவியைத் தூக்கினான். குருவி, பலமாக அடிபட்டிருந்தது. அந்த குருவியை கையில் எடுத்து உள்ளங்கையில் ஏந்தியபடி கங்கையை நோக்கி ஓடினான். நீரை எடுத்து குருவியின் வாயில் ஊற்றினான். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். ஆனால் அந்த குருவி ராம் சுரத்குன்வர் கைகளிலேயே உயிரைவிட்டது. ராம் சுரத்குன்வருக்கு கண்ணீர் பெருகியது. கனத்த இதயத்துடன் கண்ணீர் பெருக கங்கையிலேயே அமர்ந்துவிட்டான். சின்னஞ்சிறிய குருவி இறந்த காரணம் தெரியாமல் தவித்தான். குருவியின் அழகு எங்கே? அதன் பறக்கும் சக்தி எங்கே? தெரியாமல் தவித்தான். இறக்கைகள் இருந்தும் பறக்கமுடியாத காரணம் என்ன? குருவியிடம் இருந்த எது சென்றது? உயிரா? உயிர் என்றால் என்ன? என்று மனம் குழம்ப ஆரம்பித்தது. விடை தெரியாமல் தவித்தது. கையில் இருந்த குருவியை கங்கையில் விட்டான். கங்கையின் கரையில் அமர்ந்து நீண்ட நேரம் அழுதான். மனதில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு மனம் கலக்கம் அடைந்தது. வாழ்க்கை திசை மாறியது. மனம் பிறப்பு, இறப்பு பற்றியும் சிந்திக்கத் தொடங்கியது. அவனது மனம் இறைவனை நோக்கித் திரும்பியது. அந்த சிந்தனை ராம்சுரத்குன்வரை யோகிராம் சுரத்குமாராக மாற்றியது. குருவியின் இறப்புத்தான் யோகிராம் சுரத்குமார் ஞானநிலை அடைய வழிவகை செய்தது. நாம் இதுவரை வாழ்க்கையில் ஒரு சம்பவமோ, அல்லது இன்னோரு மனிதரோ தூண்டுகோலுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிந்தோம். இந்தியாவேகூட தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அது எப்படி? இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சர் எட்வின் அர்னால்ட், 1832 ஆம் ஆண்டு பிறந்தார். லண்டன், கிங்ஸ் கல்லூரியில் படித்தார். 1867 ஆம் ஆண்டு, இந்தியாவில் புனேவில் ஆங்கிலேயருக்கான சமஸ்கிருத கல்லூரியில் படித்தார். சர் எட்வின் அர்னால்டுக்கு இந்தியாவின் மீது இந்திய கலாச்சாரத்தின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. இந்தியா மட்டுமல்ல இந்திய இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் எட்வினுக்கு மிகவும் பிடித்த நூல்களாகும். இந்த இதிகாசங்கள் இந்தியாவை பற்றிய ஒரு நல்ல மரியாதையும் மதிப்பீட்டையும் எட்வினுக்கு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல கணிதம், கலாச்சாரம், வானவியல் ஆகிய துறைகள் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவின் சிறப்புகள் பற்றி இங்கிலாந்தில் பரப்பினார். எட்வின் இந்தியாவை தனது தாய் நாட்டைப்போலவே நேசித்தார். சமஸ்கிருத நூல்களை இங்கிலாந்தில் மொழிபெயர்த்தார்.
எட்வின் அர்னால்ட் மொழிபெயர்த்த நூல்கள்: _ சூர்யா சரவணன் தொடரும் |
||||||||
by Swathi on 30 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|