|
||||||||
தொடர்:இன்ஸ்பிரேஷன்-3 |
||||||||
தெரசா ‘‘உங்கள் மருத்துவமனை எதிரில் ஒரு நோயாளி மரணப்படுக்கையில் துடிதுடித்து கொண்டிருக்கிகிறான். அவனுக்கு நீங்கள் உதவக்கூடாதா ? ’’ ‘‘ உயிர் பிழைக்கும் நிலையில் உள்ளவருக்குத்தான் எங்களால் உதவமுடியும். இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போகும் நிலையில் இருப்பவருக்கு எங்களால் உதவ முடியாது’’ என்றார் அந்த மருத்துமனை அதிகாரி. அந்த பதில் அன்னை தெரசாவின் மனதை உலுக்குப் போட்டது. ஒரு மனிதன் நல்லவனாக? கெட்டவனாக? ஏழை? பணக்காரனாக எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் அவனது இறப்பு என்பது அமைதியாக நிகழவேண்டும். எந்த ஒரு மனிதனும் துடிதுடித்து அனாதையாக இறப்பதை விரும்பவில்லை. இறக்கும் தருவாயில் இறைவனை பிரார்த்தனை செய்தபடி அமைதியான மன நிலையில் தான் இறக்கவேண்டும் என்பது தெரசாவின் எண்ணமாக இருந்தது. இறக்கும் தருவாயில் இருந்த மனிதன் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் எப்படி தவித்திருப்பான். துடித்திருப்பான். இறக்கும்போது என்னென்ன நினைத்தானோ. அதைவிடக் கொடுமையைசிக இறக்கும் தருவாயில் இருக்கும்போது கூட அவன் மீது அன்பு செலுத்த ஆள் இல்லையே என்று கலங்கினார். யாரோ ஒரு மனிதருக்காக வாய்விட்டுப் புலம்பினார். கண்ணீர் பெருக கதறி அழுதார். அதன் விளைவு? நிர்மல் ஹிர்தே இல்லம் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடங்கப்பட்டது. அதில் 85,000 பேர் அமைதியான முறையில் உயிர் நீத்துள்ளனர். இதேபோல் ஒரு நாள் சாலை ஓரத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை இருப்பதைப் பார்த்தார் அன்னை. அந்த குழந்தையை பேணிக் காப்பாற்றினார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு என்று 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் ’ நிர்மல் சிசுபவன்’ தொடங்கப்பட்டது. பின்னர் அது நிர்மல் கென்னடி இல்லமாக வளர்ச்சியடைந்தது. 1957 ஆம் ஆண்டு தொழு நோயாளிகளுக்காக ‘‘சாந்திநகர் தொழுநோயாளி இல்லம் தொடங்கப்பட்டது’’ தொழு நோயாளிகளைத் தொடும் போதெல்லாம் இறைவனைத் தொடும் உணர்வு தனக்கு ஏற்படுவதாக கூறினார். 119 நிறுவனங்கள் மூலமாக 745 நாடுகளில் ஒரு நாளைக்கு 2 லட்சம் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தார் அன்னை தெரசா. தொழுநோயாளிகள், உயிருக்குப் போராடுபவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களைப் பார்த்ததும் அன்னை தெரசாவுக்கு ஏற்பட்ட தூண்டுதல் காரணமாக அவர்களுக்காக ஒரு அமைப்பைத் தொடங்கினார். நோயாளிகள் மீது அன்பு செலுத்தினார்.
எர்னஸ்டோ சே குவேரா மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். இங்கே ஒரு பிதா புரட்சி வீரனை உருவாக்கியிருக்கிறார். மருத்துவம் படித்த சே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. வெளிநாடுகளைச் சுற்றிப்பார்த்தார். அர்ஜைன்டைன் கப்பலில் மாலுமியாகச் சேர்ந்து டிரினிடாட்டிலிருந்து பிரிட்டீஷ் கயானா வரை பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தார். இரண்டாம் உலகப் போர், மாணவன் சே குவேராவின் மனதில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. சேவை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது. சே வின் தந்தை ரஷ்யாவின் ஆதரவாளராக இருந்தார். ’அச்சு’ நாடுகள் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்று நம்பினார். ஜெர்மன், நாஜிகளை தோல்வியடையச் செய்த ஸ்டாலின் கிராட் யுத்தம் அவர்களை கவர்ந்தது. அச்சு நாடுகளின் ஒற்றர்கள் அர்ஜெனிடைனா முழுவதும் இருந்தனர். அவர்கள் ரகசியமாக ஒரு வானொலி நடத்திவந்தனர். பெரரோன் அரசு நிர்வாகம் ஒற்றர்களின் செயல்பாடுகளை கண்டுகொள்ளவில்லை. சேவின் தந்தை அந்த ஒற்றர்களை கண்டறிவதில் உதவினார்கள். இதை நேரில் பார்த்த சே. அதில் தானும் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். தன்னை உதவியாளனாக சேர்த்துக் கொள்ளும்படி தந்தையிடம் வற்புறுத்தினார். அதற்கு சேவின் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. அர்ஜென்டைனாவில் பெரோன் ஆட்சிக் காலத்தில் ரகசியப் போராட்ட அமைப்புகள் அதிகமாக இருந்தன. கோர்டோபோபாவில் ஒரு அமைப்பில் சேவின் தந்தை அங்கத்தினராக செயல்பட்டார். ஒரு சில ரகசிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது போலீசாரை எதிர்க்கவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டும் சே வின் தந்தை குண்டுகள் தயாரித்தார். இந்த குண்டு தயாரிக்கும் பணி அவரது வீட்டிலேயே நடந்தது. இதை நேரடியாக பார்த்தார் சே. தன்னை அந்தப் பணியில் சேர்த்துக்கொள்ளாத தந்தையைப் பார்த்து சே, ‘‘ பாபா! என்னை உங்களுக்கு உதவியாளனாக சேர்த்துக் கொள்ளப்போகிறீர்களா? அல்லது நான் வேறு ஒரு போராட்ட அமைப்பில் சேர்ந்துகொள்ளவா?’’ என்று கேட்டார். தனது மகனின் அரசியல் பணி பற்றி தந்தை கூறுகையில்,
நிவேதிதா பாரதியை பார்த்து ’’எங்கே உனது மனைவி?’’ என்று கேட்டார்.
பெண்ணடிமைத்தனம் என்பது மிகப்பெரிய முட்டாள்தனமாக பாரதிக்கு பட்டது.
_ சூர்யா சரவணன் -தொடரும் |
||||||||
by Swathi on 30 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|