LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சர்வதேச வேட்டி தினம்: புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அனைவரும் வேட்டி அணிந்து வந்தனர்!

சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வினிகுமார் தலைமையில்  அதிகாரிகள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வந்தனர்.

வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படுகிறது. தற்போது நாகரீக வளர்ச்சியில் பலர் வேட்டி கட்டுவதையே மறக்கின்ற நிலை உருவாகி விட்டது. இந்த நிலையில் தான் சர்வதேச வேட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச வேட்டி தினத்தையொட்டி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும், செவ்வாய்க்கிழமை வேட்டி அணிந்து வந்தனர். 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் பலரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தலைமைச்செயலர் அஸ்வினி குமார் கூறும் போது,  "வேட்டி அணிவதை பெருமையாகக் கொள்ள வேண்டும். அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது வேட்டி அணிய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதர செயலர்கள் கூறும் போது, "ஆண்டு முழுவதும் வேட்டி கட்டலாம். இதனால் பாரம்பரியம் காக்கப்படுவதுடன், நலியும் நெசவுத்தொழில் பாதுகாக்கப்படும். அனைவரும் வேட்டி கட்டுங்கள்" என்றனர்.

by Mani Bharathi   on 08 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.