LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சர்வதேச அளவில் தமிழை அங்கீகரிக்கும் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை: சென்னையில் நடந்தது!

சர்வதேச அளவில் தமிழை கணினி வழி அங்கீகரிக்கும் தொழில்நுட்ப  பயிற்சிப் பட்டறை சென்னையில் நடந்தது.

இணையத்தில் தமிழ் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதிலுள்ள பிரச்சினை என்னவெனில் குறிப்பிட்ட எழுத்துருக்களைத் தவிர மற்ற எழுத்துருக்கள் (FONTS)  பொதுவானதாக  இல்லாததால்,  தமிழில் அனுப்பும் மின்னஞ்சல் பெறுபவர்கள் அதனைப் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதேபோலவே, தமிழில் உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகள் தற்போதைய நிலையில் உலக அளவில் பயன்படுத்தும் நிலையில் இல்லை. இதனால் வேறு வழியின்றி அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் ஆங்கிலத்திலேயே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் வகையில் டேட்டா எக்ஸ்ஜென் என்ற அமெரிக்க நிறுவனம்,  புதிய இணைய மென்பொருள் தொழில்நுட்பம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

 இது குறித்து அறிமுகப்படுத்தும் பயிற்சிப் பட்டறை சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. ஐஏஎம்ஏஐ ( IAMAI - Internet and mobile association of India) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிற்சி பட்டறையில், இத்துறை சார்ந்த நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இது குறித்து, டேட்டா எக்ஸ் ஜென் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆஷிஷ் மோடி கூறியதாவது:

"ஐடிஎன் (IDN - Internationalised Domain names) எனும் இப்புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் இன்னும் மூன்று மாதத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது குறித்து தான் தற்போது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னையில் தான் முதன்முதலாக இதனைத் தொடங்கி இருக்கிறோம். விரைவில் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று இத்தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளோம்.

 தமிழ், கன்னடம், இந்தி உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய அலுவல் மொழிகளில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.

இதன்மூலமாக ஒருவர் நமது தாய்மொழியில் உலகத்தின் எந்த மூலைக்கும் தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். மேலும், பொதுவான எழுத்துரு என்பதால் அந்த மொழியில் எழுதப்பட்ட விவரங்களைத் தடையில்லாமல் படிக்க முடியும்" 

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.