நடப்பாண்டில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிதாக, 4,100 பேரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அவ்வங்கியின் தலைவர் நரேந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இதனால் தற்போது வங்கியில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 31 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட நரேந்திரா, தங்கள் ஊழியர்களின் சராசரி வயதை 43ல் இருந்து 35 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தங்கள் ஊழியர்களில் 36 சதவீதம் பேர் பெண்களாக உள்ள நிலையில் இதை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|