LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இப்படிக்குத் தமிழ்

                                இப்படிக்குத் தமிழ்


அன்புள்ள தமிழர்களே!!!


இதை நீங்கள் படிக்கும்போது,

நான் உங்களை விட்டு வெகு தூரம்

சென்று கொண்டிருப்பேன்!


என் வேண்டுகோள்கள்

சிலவற்றையாவது கேளுங்கள்!


தமிழில் திரைப்படம் எடுங்கள் ,

உலகின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும்

ஒரு இயக்குனர் உருவாகிவிட்ட போதிலும்!!


தக்காளி என்றே அழையுங்கள்,

வணிக வளாகத்தின் கண்ணாடிக்கூண்டில்

தங்க நகைகளாக அவை மின்னிடும்போதிலும்!!


நம் மொழியில் செய்திகளை பாருங்கள்,

பாண்டி பஜாரின் தெருவோரத்தில் கூறு நூறு ரூபாய்

என்று ஐபோன்கள் விற்கப்படும்போதிலும்!!


அன்பளிப்பு என்றே போடுங்கள்,

செவ்வாய் கிரக வாசியாகிவிட்ட அண்ணன் மகன் வீட்டிற்கு

விருந்தினராக செல்லுகையில், அன்பளிப்பாக

காற்றடைத்த சிலிண்டர் ஒன்றை கொடுக்கும்போதிலும்!!.


உபயம் என்றே எழுதுங்கள்,

இரவோடு இரவாக நிலவைக் கைப்பற்றி,

அதில் ஓர் கோட்டையைக் கட்டி , கோட்டைக்கு

நன்கொடையாக தரும் சுவர்க் கடிகாரத்திலும்!!


இவற்றால் என்னை பரிதாபத்திற்குரியவனாக

பார்ப்பவன் முட்டாள் இனத்தவன் !!


கடைசி தமிழனின் மூச்சொழிந்து அழிந்துவிட நேர்ந்தாலும்

நான் எங்கோ வாழ்ந்துகொண்டே இருப்பேன்!!


நன்றி !!! வருகிறேன் !


-    துங்கபுரம் K சிவசங்கர்.

by Sivasankar   on 14 Apr 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
22-Sep-2014 22:15:39 ப.கோபாலகிருஷ்ணன் said : Report Abuse
ஒரு மொழி அழிந்துவிடும் என்பதிற்காக பயன்படுத்துவதைவிட அது நம் தாய்மொழி என்ற உணர்வு வேண்டும் என்பதை உங்கள் வரிகள் கட்டுகிறது . மிகவும் அருமை .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.