LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

இரண்டாம் உலகம் - திரை விமர்சனம் !!

நடிகர் : ஆர்யா 

 

நடிகை : அனுஷ்கா

 

இயக்கம் : செல்வராகவன்

 

இசை :

 

பாடல்களுக்கு : ஹரிஸ் ஜெயராஜ்

 

பின்னணி : அனிருத்

 

ஒளிபதிவு : ராம்ஜி

 

வித்தியாசமான திரைகதை இயக்குவதில் வல்லவரான செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்காவின் சீரிய நடிப்பில் உருவாக்கி இன்று(நவம்பர் 22) வெளியாகி இருக்கும் படம் தான் இரண்டாம் உலகம். ரசிகர்கள் மற்றும் திரை உலகினரின் பலத்த எதிர் பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கும் இந்த படம் கண்டிப்பாக இது புது முயற்சி என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இதை ரசிக்கும் மக்களின் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். 

 

பொதுவாக, பாண்டஸி படங்களுக்குள் நாம் லாஜிக் பார்க்க முடியாது. அதனை இயக்குபவர்கள் மூளையில் என்ன ஓடுகிறதோ அது அப்படியே காட்சியாகும். அதனால் லாஜிக் என்ற ஒரு விசயத்தை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு படம் பார்ப்பது சிறந்தது. 

 

ஒரு உலகம் அதில் ஒரு ஆர்யா, ஒரு அனுஷ்கா அவர்களுக்குள் சிலபல வேளைகளில், சிலபல மோதல்களுக்கு பிறகு காதல் வருகிறது. ஆர்யா, அனுஷ்காவின் காதல் வளர்ந்து கொண்டிருக்க, திடீரென புல் தடுக்கி செத்துப் போகிறார் அனுஷ்கா. இப்படியே இடைவேளை வந்து விட, அதன் பிறகு, இரண்டாம் உலக கதை ஆரம்பிக்கிறது, அதில் ஒரு ஆர்யா ஒரு அனுஷ்கா, ஆனால் அந்த உலகத்தில் காதல் கிடையாது. பிடிச்சவளை தூக்கிக்கிட்டு போய் குடும்பம் நடத்த வேண்டியது தான். அப்படித்தான் இரண்டாம் உலகத்து ஆர்யாவும் அனுஷ்காவும் இருக்கின்றனர். 

 

அந்த ஊருக்குள் ஒரு கன்னித்தாய் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செழிப்பாக இருப்பதால் மற்றொரு கூட்டம் அவரை கடத்த முயற்சிக்கிறது. அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் அந்த கன்னித்தாய் இரண்டாம் உலகத்தில் காதலை நுழைத்து ஊரை காலி பண்ண முடிவெடுக்கிறார். அதற்காக முதல் உலகத்தில் காதலி செத்துப் போன சோகத்தில் இருக்கும் ஆர்யாவை கொண்டு வந்து இரண்டாம் உலகத்தில் விட்டு காதலை விதைக்கிறார். அங்கு காதல் முளைத்ததும் அவரை தண்ணிக்குள் தள்ளி விட்டு மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கு ஒரு அனுஷ்காவை பார்த்து காதலை விவசாயம் செய்ய வைக்கிறார். இது தான் படத்தின் முழுகதை. 

 

படத்திற்கு அடித்தளமே அனுஷ்காவின் நடிப்பு தான். துவக்கத்திலிருந்து இறுதி வரை அவரை சுற்றி தான் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இரண்டாம் உலகத்தில் பல கோணங்களில் பறந்து பறந்து கன்பைட் காஞ்சனா வேடம் போட்டு இருக்கிறார். முதல் உலகத்தில் பார்த்து ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு பெர்பார்மன்ஸில் பின்னி எடுக்கிறார்.

 

ஆர்யா காதாபாத்திரத்திற்கேட்ப நன்றாக நடித்துள்ளார். அதிலும் அனிமேசன் சிங்கத்துடன் கிராபிக்ஸ் பைட் சான்சே இல்ல.....

 

ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இரண்டு ஹிட் ஆகியுள்ளன. பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பராக உள்ளது.

 

கற்பனையை காட்சி படுத்தும் திறனில் இயக்குனர் செல்வராகவனை அடிச்சிக்கவே ஆளில்லை என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்திருகிறது.

 

மொத்தத்தில் இரண்டாம் உலகம், முதல் பாதி சூப்பராக இருந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் டல் அடித்தாலும், பாண்டஸி படம் என்பதால் ஒன்றிரண்டு முறை பார்க்கலாம். 

 

கதையின் சுருக்கம் : (எனக்கு புரிஞ்சது)

 

காதலால் நாகரீகமடைந்த மனிதன் நாகரீகமில்லாத உலகத்தில் காதலை நுழைக்கிறான். அதனால் அந்த நாகரீகமில்லாத இரண்டாம் உலகம் நாகரீகம் அடையத் துவங்குகிறது என்பது தான் படத்தின் சுருக்கமான கதை.

by Swathi   on 22 Nov 2013  0 Comments
Tags: Irandam Ulagam   Irandam Ulagam Movie   இரண்டாம் உலகம்              
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
இரண்டாம் உலகம் - திரை விமர்சனம் !! இரண்டாம் உலகம் - திரை விமர்சனம் !!
இரண்டாம் உலகம் படத்துக்காக ரத்தம் சிந்தி நடித்திருக்கும் ஆர்யா !! இரண்டாம் உலகம் படத்துக்காக ரத்தம் சிந்தி நடித்திருக்கும் ஆர்யா !!
இரண்டாம் உலகத்திற்கு யு சான்றிதல் !! இரண்டாம் உலகத்திற்கு யு சான்றிதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.