LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

இரண்டு சொட்டுக் கடல்.. - வித்யாசாகர்!

 

1
த்தத்தில்
மறையும் உலகை
மௌனத்தால் திறக்கிறேன்.,

ரத்தத்தில்
உறையும் மனிதத்தை
அன்பினால்  பிரிக்கிறேன்.,

முத்தத்தில்
ஊறும் மனதிரண்டை
இதோ இதோ -
உனக்காக ஒன்றும்
எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்..

உலகெங்கும்
பூக்கும்
புன்னகையனைத்தையும்
மனதால்
பறித்துக்கொண்டு வா பெண்ணே

முத்தங்களின்
சிறகு ஒன்று நீ
மற்றொன்று நானாய்
அன்பிருக்கும் வானமெங்கும் பறப்போம்
.
அன்பு தீரும்போது
அங்கேயே
இறப்போம்..

நம் இறப்பு சொட்டும்
மழைதோறும்
ஈரந்தோறும்
கடல்
கடலாய் கடலாய்
இப்பூவுலகு
வனமாய் வனமாய்
வெளியெங்கும் அழகு சொட்டச் சொட்ட
மீண்டும் -
புதிதாய்ப் பிறக்கட்டும்!!!
-------------------------------------------------

2
து ஆணலை
அது பெண்ணலை
ஆனால் -
இரண்டுமே கடல்..

இது நீலம்
அது வெள்ளை
ஆனால் -
இரண்டுமே வானம்..

இது காற்று
அது நீர்
ஆனால் -
இரண்டுமே உயிர்..

இது உயிர்
அது உடல்
ஆனால் -
இரண்டுமே நீ..

என் நீ!!
--------------------------------------------
வித்யாசாகர்

 

 

by Swathi   on 22 Apr 2015  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
28-Apr-2015 23:58:02 hyrunrahman said : Report Abuse
****** கற்பழிப்பு******* குரங்கிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான் என்பதை கற்பழிக்கிற ஒவ்வொரு ஆண் மிருகமும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.
 
25-Apr-2015 12:23:18 சங்கீத் said : Report Abuse
இதயம் வருடும் இனிய கவிதை
 
25-Apr-2015 12:23:16 சங்கீத் said : Report Abuse
இதயம் வருடும் இனிய கவிதை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.