|
||||||||
இறந்த காலத்திற்காய் எழுதிய துயரகீதம் |
||||||||
இன்னும் தூர வருகின்றேன்.
இருந்த இடமும் தூரம்தான்; ஆனாலும் இடம்மாறி
இன்னும் தூர வருகின்றேன்.
நானே என்னைவிட்டும் தூரித்த பிறகு
இந்த நிலமென்ன?
நானிருந்த பழைய இடமென்ன?
என்றும் காட்டு மல்லிகைப் பூவாசம் வீசும்
என்மனதில்
இந்தப் பயணத்தில் காரணமோ
தீத் தழும்பாய் விழுந்ததுதான்.
இன்னும் உலகம் விடியவில்லை.
நேற்று ராத்திரிகூட கூவிய சேவலின் தொண்டையை
அதன் கொண்டையை, காதைக்
கிள்ளி எறியுங்கள்
இன்னும் உலகம் விடியவில்லை.
விடிந்திருந்தால் எனைப் பிரித்து தனிமையிலே
துவேஷித்த
'அயலூரான்' பேதம் ஜீவிக்க நியாயமில்லை.
இருந்தாலும் எனக்குள்
காட்டு மல்லிகைப் பூவாசம் வீசும்.
அயலூரான் என்ற தீத்தழும்பு இதயத்தின் ஓர்
மூலையில் விழுந்தாலும்
நான் துள்ளி விளையாடிய அந்த மாமரம்...
என்னைப் புரிந்து நடந்து பூனைபோல் தனக்குப்
பணியவைத்த
அன்புள்ள சகோதரி....
ஒரு நாள் அவர் கிள்ளித் தந்த முட்டையின்
மஞ்சள் கரு....
நாங்கள் இருவரும் ஒரு மாதம் வரை பேசாமலிருந்த
கொடிய துயரம்
சமையலறையில் நான் உணவும் பழப்புளி...
எனது சப்பாத்தின் 'பிசுக்பிசிக்' சத்தத்தில்
தலையுசத்தும் சொறிநாய்...
பிரியங்களைத் தந்த முகங்கள்...
நினைத்துப் பார்ப்பதற்கும் சக்தி குன்றிப் போகிறது.
என் மெல்லிதயம் புறாநடக்கும் தரை.
சிறு பூவிழுந்தால்கூட சுள்ளென்று வலிக்கின்ற
வெண்பஞ்சுப் பொதி.
நினைத்துப் பார்த்தாலும் சக்தியின்றிப் போகிறது.
போகட்டும்
எனக்கு மீசை முளைத்த அந்த வசந்தகாலத்துக்
கட்டங்கள்
ஒரு எரி தழும்போடு பிரியாவிடை கூறட்டும்
பொறுப்பேன்.
இரண்டு சொட்டுக் கண்ணீர் வடித்துவிடாமல் ஆறும்.
ஒன்றுதான், மிகப்பெருங் கவலை ஒன்றுதான்:
சகோதரி தருவதாய்ச் சொன்ன எனக்குப் பிடித்த
உலுவாக் கொட்டைக் கறிசோறு
அங்கிருக்கும் காலத்தில் தின்னக் கிடைக்கவில்லை
இன்னும் தூர வருகின்றேன். இருந்த இடமும் தூரம்தான்; ஆனாலும் இடம்மாறி இன்னும் தூர வருகின்றேன்.
நானே என்னைவிட்டும் தூரித்த பிறகு இந்த நிலமென்ன? நானிருந்த பழைய இடமென்ன? என்றும் காட்டு மல்லிகைப் பூவாசம் வீசும் என்மனதில் இந்தப் பயணத்தில் காரணமோ தீத் தழும்பாய் விழுந்ததுதான்.
இன்னும் உலகம் விடியவில்லை. நேற்று ராத்திரிகூட கூவிய சேவலின் தொண்டையை அதன் கொண்டையை, காதைக் கிள்ளி எறியுங்கள் இன்னும் உலகம் விடியவில்லை. விடிந்திருந்தால் எனைப் பிரித்து தனிமையிலே துவேஷித்த 'அயலூரான்' பேதம் ஜீவிக்க நியாயமில்லை. இருந்தாலும் எனக்குள் காட்டு மல்லிகைப் பூவாசம் வீசும். அயலூரான் என்ற தீத்தழும்பு இதயத்தின் ஓர் மூலையில் விழுந்தாலும் நான் துள்ளி விளையாடிய அந்த மாமரம்... என்னைப் புரிந்து நடந்து பூனைபோல் தனக்குப் பணியவைத்த அன்புள்ள சகோதரி.... ஒரு நாள் அவர் கிள்ளித் தந்த முட்டையின் மஞ்சள் கரு.... நாங்கள் இருவரும் ஒரு மாதம் வரை பேசாமலிருந்த கொடிய துயரம் சமையலறையில் நான் உணவும் பழப்புளி... எனது சப்பாத்தின் 'பிசுக்பிசிக்' சத்தத்தில் தலையுசத்தும் சொறிநாய்... பிரியங்களைத் தந்த முகங்கள்...
நினைத்துப் பார்ப்பதற்கும் சக்தி குன்றிப் போகிறது. என் மெல்லிதயம் புறாநடக்கும் தரை. சிறு பூவிழுந்தால்கூட சுள்ளென்று வலிக்கின்ற வெண்பஞ்சுப் பொதி. நினைத்துப் பார்த்தாலும் சக்தியின்றிப் போகிறது.
போகட்டும் எனக்கு மீசை முளைத்த அந்த வசந்தகாலத்துக் கட்டங்கள் ஒரு எரி தழும்போடு பிரியாவிடை கூறட்டும் பொறுப்பேன். இரண்டு சொட்டுக் கண்ணீர் வடித்துவிடாமல் ஆறும். ஒன்றுதான், மிகப்பெருங் கவலை ஒன்றுதான்: சகோதரி தருவதாய்ச் சொன்ன எனக்குப் பிடித்த உலுவாக் கொட்டைக் கறிசோறு அங்கிருக்கும் காலத்தில் தின்னக் கிடைக்கவில்லை
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|