LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

இறந்துபோன இரக்கம்

எரிமலையென வெடித்தாய்

எதிரி பிறப்பு அறுத்தாய்!

வில்தனைக் கையில் எடுத்தாய்

நாடு விளங்கு புகழ் படைத்தாய்!

நதிகளை கயிரெனக் கடந்தாய்

வியர்வைத்துளி தினம் விடுத்தாய்!

மலைகளைக் மடுவெனக் கடந்தாய்

நீதியை நெஞ்சினில் நிறைத்தாய்!

பட்டினிக் கடுந்தவம் புரிந்தாய்

காடும் மேடும் கடந்தாய்!

காதல் நிலைகளைத் துறந்தாய்

உறங்க மறுத்து விழித்தாய்!

மதத்தின் வேற்றுமை மறந்தாய்

துர்குணத்தைத் துரத்தி அடித்தாய்!

வெயிலுக்கும் வெப்பம் கொடுத்தாய்

வாள் எடுத்து வன்மம் அறுத்தாய்!

விண்ணைக் கண்ணால் துழைத்தாய்

சொல்லில் உறுதி படைத்தாய்!

சோகம் நினைக்க மறந்தாய்

மகிழ்ச்சியை மனதிலே மறைத்தாய்!

கசப்பையும் இனிப்பாய் உண்டாய்

கடும் இழப்பையும் சகித்துக்கொண்டாய்!

இதயத்தில் வெடிகுண்டாய் வெடித்தாய்

உயிர்மூச்சினில் எங்களைக் காத்தாய்!

இராணுவப் போர் தொடுத்தாய்

நெறியை முறையாய் ஏற்றாய்!

உயிரைக் கொடுத்துக் காத்தாய்

உள்ளப் பண்பு படைத்தாய்!

இத்தனை செய்திங்கு என்ன பலன்

இரக்கத்தை இழந்த மனிதரின்பால்!

வாழ்க்கை மயக்கத்தில் விழுந்த மனிதனிவன்

தினம் இரக்கத்தை கொன்று புதைக்கின்றான்!

உன் உறக்கத்தை

துரத்தி அடித்துவிட்டு!

இரக்கமற்றோர் உறக்கத்தைக்

காக்கத் துடிக்கின்றாய்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: இறந்துபோன இரக்கம்   Iranthupona Irakkam   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Iranthupona Irakkam Kavithai   Kavithai about Iranthupona Irakkam  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.