இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது. |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.) |
மணக்குடவர் உரை: |
கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும். |
தேவநேயப் பாவாணர் உரை: |
கனவிலும் கரத்தல் தேற்றாதார் மாட்டு-தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; இரத்தலும் ஈதலே போலும்-ஒன்றை யிரத்தலும் வறியார்க் கொன்றீதலே போலும்! இரந்த பொருள் இழிவுந் துன்பமுமின்றி வருதலாலும், ஈவோனுக்குப் புகழைக் கொடுத்தலாலும், ’இரத்தலும் ஈதலே போலும்’ என்றார். உம்மை யிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது எச்சம். ஏகாரம் ஈற்றசை. |
கலைஞர் உரை: |
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும். |
சாலமன் பாப்பையா உரை: |
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே. |
Translation |
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream. |
Explanation |
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself). |
Transliteration |
Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|