LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

இறவா வாழ்க்கையும், இறுதிக் காலங்களும்

 1979 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரைக்குச் சென்ற கக்கன் , உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . சிகிச்சை பெற்றும் உடல் நலம் தேறியபாடில்லை . சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் . உடல்நலம் படிப்படியாகப் பாதிக்கப்பட்ட நிலையில 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அன்றைய முதல்வர் எம் . ஜி . ஆரின் ஆணையின் பேரில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் , முதுமை காரணமாகச் சிகிச்சை பலனளிக்கவில்லை . சுயநினைவு திரும்பாத நிலையிலே சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாளன்று கக்கன் இயற்கை எய்தினார் .

மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை . இதில் சிலரின் உடல் அழிந்து போனாலும் அவர்கள் பெற்ற புகழ் அழிவதில்லை . வாழ்ந்த காலங்களில் மனித சமுதாயத்திற்கும் அவர்களது தாய் நாட்டிற்கும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் புகழ் அமைகிறது . ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று சொன்னாலே அவன் மக்கள் மனத்தில் இடம் பிடித்துள்ளான் என்பதைக் குறிக்கும் . வாழும்போது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பின்னும் அவன் மக்களால் நினைவு கொள்ளப்பட்டால் மட்டுமே அவன் வாழ்ந்ததாகக் கொள்ள முடியும் . இதைத்தான் “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்றார் வள்ளுவர் . அப்படியானால் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றி பெற்றதா ? தோல்வியுற்றதா ? என்பதை அம்மனிதனின் மரணத்திற்குப் பின் நிலைத்து நிற்கும் எச்சத்தைக் கொண்டே அளவிட வேண்டும் . இந்த அளவுகோலைக் கொண்டு அளவிட்டால்தான் கக்கனின் 72 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றை நன்கு உணர்ந்து கொள்ள முடியும் .

எச்சம் என்பதை , அவரவர் ஈன்ற பிள்ளைகள் என்று பலர் பொருள் கூறுவதைப் பார்க்கிறோம் . ஆனால் , அது பொருந்தாப் பொருளாகத் தோன்றுகிறது . காரணம் பிள்ளைகள் இல்லாத பெருந்தலைவர்களுக்கு இது பொருந்துவதில்லை . முன்னால் முதல்வர் பெருந்தலைவர் காமராசர் திருமணமே செய்து கொள்ளவில்லை . அப்படியானால் அவரை மேற்சொன்ன அளவுகோலைக் கொண்டு அளவிட முடியாத நிலை வந்த விடும் . பெருந்தலைவர் , ஏழைப்பங்காளன் என்று சொன்னால் காமராசரை மட்டுமே குறிக்கும் . அந்த அளவிற்குப் புகழெச்சம் நிரம்பிய தலைவர் காமராசர் .

எனவே எச்சம் பலவகையானது என்று ஊகிக்க முடிகிறது . எச்சம் என்பது ஒருவர் நினைத்தவை , பேசியவை , செய்தவை என விரிவாகப் பொருள் கொண்டு அவற்றை , சொல்லெச்சம் , செயலெச்சம் , அடையாள எச்சம் என்று மூன்று வகைக்குள் அடக்கலாம் .

ஒரு மனிதனால் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை மீண்டும் மீண்டும் மக்களின் வளர்ச்சிக்குச் சொல்லப்படுமேயானால் அவை சொல்லெச்சம் ஆகும் . இதற்கு விவேகானந்தரின் அறிவுரைகளை உதாரணமாகக் காட்டலாம் . அவரது பொன்மொழிகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நம்மால் காண முடிகிறது .

தமது வாழ்க்கையை அடையாளம் காட்டி , அதுபோலவே பிறரும் வாழ வழிகாட்டியாக அமைத்துக் கொள்வது செயலெச்சம் ஆகும் . காந்தியடிகள் , வள்ளலார் போன்றோர் அவர்களது வாழ்க்கையையே அடையாளமாகக் காட்டினர் . அதையும் மக்கள் ஏற்று நடந்து கொள்வதைப் பார்க்கிறோம் .

எவராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைக் கண்டுபிடித்து அல்லது பிறரால் செய்யமுடியாத ஒன்றைச் செய்து வைத்து , அதை வருங்கால மக்கள் கண்டுபிடித்தவன் - செய்து வைத்தவன் பெயரைச் சொல்லும் அளவிற்குச் செய்து வைப்பது அடையாள எச்சம் எனப்படும் . தம் மனைவியின் மேல் கொண்டிருந்த அன்பின் காரணமாக நினைவாலயம் என்ற பெயரில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் .

மனிதர்களை எடைபோட்டு அறிய இந்த மூன்று அளவுகோல்கள் போதுமானவை என்று தோன்றுகிறது . அவ்வகையில் அரிதான தலைவர்களில் ஒருவராக , அரசியல் அறத்தின் எச்சமாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கக்கன் .

“பிழைக்கத் தெரியாதவர்கள் என்று

பழிக்கப்படுபவர்களால்தான்

இந்த உலகம்

பிழைத்துக்கொண்டிருக்கிறது”

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.