|
||||||||
ஐராவதம் மகாதேவன் (கல்வெட்டியல்) |
||||||||
பிறப்பு - கல்வி : இவர் அக்டோபர் 2, 1930இல் மண்ணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். தொழில் முறை வாழ்க்கை 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும் 1987 - 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் (குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள்) மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன் பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். கோலாலம்பூர் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்பு 966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே வருடம் தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார். சிந்து எழுத்துக்கள் பற்றிய ஆய்வு 1970-ஆம் ஆண்டு: புகழ்பெற்ற சவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது மகாதேவனின் கருத்து. விருதுகள் இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. |
||||||||
by Swathi on 01 Nov 2014 0 Comments | ||||||||
Tags: Iravatham Mahadevan ஐராவதம் மகாதேவன் Tamil Epigraphist | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|