LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

எதைக்கொண்டும்
நிரப்பி விட முடிவதில்லை
எனது வெற்றிடத்தை...!

வியர்த்து வெளியேறுகிறது
எனது வெறுமை....!

கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய்
தொங்கி கொண்டிருக்கிறேன்
அதன் விளிம்பில்....!

கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன்
எனது வெற்றிடத்தை...!

வெறுமை
எல்லா உணர்வுகளின்
கலவையாக வெறுமை
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.

கிளைகளில்லா மரம் போல
மரத்துப்போகிறது மனம்
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன

ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம்
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில்
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!

வெற்றிடம்
தோன்றி மறைகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன
கவிதையால்.....!

துவராகா சாமிநாதன்

by Dwaragasaminathan   on 24 Jul 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.