இசைக் கரணம் பழங்காலத்தில் தலைமை நரம்பு கருவியாக விளங்கிய யாழில் நரம்புகளை இசைக்கும் பொழுது கையினால் செய்யும் நுண்தொழில் இசைக்கரணம் ஆகும். இது எட்டு வகைப்படும்.
வார்த்தல் நீர் மேலிருந்து கீழே வருவது போல இறங்கு நிரலில் இசைப்பது
வடித்தல் ஏறு நிரலில் இசைப்பது
உந்தல் முன்னோக்கி அல்லது பின்னோக்கி தள்ளுதல்
உறழ்தல் சரிகம என்னும் கோவையை சமகரி என்று இடம் பிறழ்ந்து இசைப்பது
உருட்டல் விரைவு நடையில் இசைப்பது
தெருட்டல் தெளிவாக இசைப்பது
அள்ளல் மனலை அள்ளுவது போலக் கோவைகளை கூட்டமாக இசைத்தல்
பட்டடை இணை என்னும் உறவுநிலையில் கோவைகளை இசைத்தல்
நன்றி உலகத் தமிழ்க் களஞ்சியம்
|