பாகிஸ்தானுக்கு எந்த சூழ்நிலையிலும், ஆயுதங்களை வினியோகிக்க மாட்டோம் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்று, இஸ்ரேல் நாடு, பாகிஸ்தானுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயுதங்களை வினியோகித்து வருவதாக, செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தது, இது குறித்து, அந்நாட்டின், இந்தியாவிற்கான, தூதர் அலோன் உஷ்பிஸ்சிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது: இஸ்ரேலின் வெளியுறவுக் கொள்கைகள் மிகத் தெளிவானவை. ஆயுத ஏற்றுமதியில் மிகுந்த கவனம் கொண்டுள்ளோம். மேலும், இந்தியா எங்கள் நட்பு நாடு. ஒருபோதும், பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்க மாட்டோம்.இந்தியாவுடனான உறவில் நாங்கள் பெருமிதமும், திருப்தியும் கொண்டுள்ளோம்.இவ்வாறு, தூதர் அலோன் உஷ்பிஸ் கூறினார்.
|