LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இஸ்ரோவும், டாடா நிறுவனமும் இணைந்து ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்துகள் தயாரிப்பு ! விரைவில் முக்கிய நகரங்களில் வலம் வரப்போகின்றன !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளனர்.   


உலகில் இயற்கை எரிபொருளின் வளங்கள் குறைந்து வருவதை அடுத்து, மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதில் பலவேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும்(இஸ்ரோ), டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கக்கூடிய பேருந்தை கண்டுபிடித்துள்ளனர்.இந்த பேருந்தில் செயல்விளக்கம் பற்றி, இஸ்ரோவின் கவுரவ ஆலோசகர் வி.ஞானகாந்தி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டாக்டர் எம்.ராஜா ஆகியோர் நேற்று கூட்டாக தெரிவித்துள்ளதாவது,கடந்த 2006–ம் ஆண்டு இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இந்த ஹைட்ரஜன் பஸ்சை வடிவமைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இந்த பஸ்சை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்ரோ நிறுவனத்தின் ஒத்துழைப்போடு ஹைட்ரஜனை பஸ் இயக்கத்திற்காக பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20 கிலோ வாட் முதல் 120 கிலோ வாட் வரை பஸ்சை இயக்கக்கூடிய எரி சக்தி உருவாக்கப்பட்டது.பல்வேறு நிலைகளில் இந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டு,பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஹைட்ரஜனை பயன்படுத்தி பஸ்சை இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் இந்தியா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஹைட்ரஜன் பேருந்துகள் வலம் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 28 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.