இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
மழைபெய்தலும் விளைதலுங்கூடி. நூல் சொன்ன இயல்பினானே முறையை
நடத்தவல்ல அரசனது நாட்டகத்தினவாம்.
இது மேற்கூறிய முறைமைசெய்ய மழையும் விளைவும் உண்டாமென்றது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு ; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம்.
'கோலோச்சும்', 'மன்னவன்' என்பனவற்றிற்கு முன்பு உரைத்த வாறு உரைக்க . செங்கோலரசன் மண்ணுலகில் இறைவனின் படிநிகராளியா யிருத்தலால் , இயற்கையும் அவனுக்கு அடங்கி நடக்கும் என்பதாம். |
கலைஞர் உரை: |
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பதற்கு ஒப்பானதாகும். |
சாலமன் பாப்பையா உரை: |
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும். |
Translation |
Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields. |
Explanation |
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice. |
Transliteration |
Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|