தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், தென் ஆப்ரிக்க அதிபர் ஜகோப் ஜூமா, தன்னுடைய மொசாம்பிகோ சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கறுப்பர் இன உரிமைக்காக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் தென் ஆப்ரிக்க அதிபராக பதவி வகித்தார். இவர் கடந்த 8ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மெடிகிளினிக் இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தென் ஆப்ரிக்க மக்கள் நெல்சன் மண்டேலா உடல்நிலை தேற பிராத்தனை செய்து வருகின்றனர்.
|