ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலரும் பேசினர். இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவான வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்றார். காவல்துறையினரைத் தாக்கிய வழக்குகள், வாகனங்களை தீ வைத்த வழக்குகளைத் தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.
|