ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள, ஆர்.எஸ் புரா, ராம்கார், செனாஸ், அக்னூர் மற்றும் பர்க்வால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். செனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்தியா ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சிறிய ரக ராக்கெட்டுகள், கையெறி குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, அரினா பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே காஷ்மீர் பகுதிக்கு சென்றுள்ள போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
|