|
|||||
"கலாம் ஆண்டு 2020" ஜனவரி 1 கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் 100 சமூக பிரமுகர்களின் உறுதிமொழியுடன் பிறந்தது. |
|||||
மோகன், நல்லோர் வட்டம். இந்தியா விஷன் 2020.
2020 வளர்ச்சிக்கான இளைஞர்களின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்டது. சமூக ஆளுமைகளின் தன்னலமற்ற கைகோர்ப்பினால் பன்மடங்கு வேகத்துடன் இன்று துவங்கியது. நல்லோர்களின் ஆக்கப்பூர்வ செயல்களினால் இது சாத்தியப்படும் என குத்தம்பாக்கம் திரு.இளங்கோ கர்ஜித்தார். டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி, டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஆகியோரின் சிந்தனையையும் உள்வாங்கி , வழிகாட்டிகளாக ஏற்று நடக்கும் Rural Vision Foundation என்ற அறக்கட்டளை உருவாக்கியுள்ள தமிழகத்தின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு தகவல்தளம் www.eTamilNadu.org இன்று நல்லோர் நல்லோர் வட்டம் நிகழ்ச்சியில் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நேச்சுரல்ஸ் திரு .குமாரவேலு , திரு .ஷேக் தாவூத்,(APJ அவர்களின் பேரன் ) திருச்சி பனானாலீப், திரு.மனோகரன், எக்ஸ்னோரா திரு.செந்தூர் பாரி, ஈரோடு சையத் இப்ராஹிம், திரு.ஜாகிர், பீமகுளம் R.S. முருகேசன் மற்றும் பல ஆளுமைகள் கலந்துகொண்டு வளர்ச்சிக்கான தனது பங்களிப்பை உறுதி செய்தனர். வலைத்தமிழ், வின் டிவி திரு.அன்பழகன், தினத்தந்தி திரு.ஆண்டனி ஆகியோர் இந்நிகழ்வின் நோக்கத்தினை மக்களுக்குக் கொண்டு செல்ல பொறுப்பேற்றனர். டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் தியாக விதை போல் நாட்டின் வளர்ச்சிக்கு ஐந்து களங்களின் வாயிலாக ஒத்த எண்ணம் கொண்ட தன்னலமற்ற மக்களை ஒருங்கிணைத்தால் இது சாத்தியமே என உறுதியுடன் அறிவித்தார் நல்லோர் வட்டம் வழிகாட்டி திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள். இதற்காக ஆண்டு முழுவதும் செயலாற்ற அனைவரும் பொறுப்பு ஏற்பது அவசியம் என்று வலியுறுத்தினார். |
|||||
by Swathi on 20 Jan 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|