வழக்கமாக அரசியல் கட்சிகள்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து மக்களுக்கு வழங்குவார்கள். பஞ்சாயத்துத் தேர்தலில் மக்கள் தேர்தல் அறிக்கையாக ஒன்றைத் தயாரித்து தன்னாட்சி - உள்ளாட்சி உங்களாட்சி மற்றும் தோழமை அமைப்புகளும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
- கிராமசபையை வலுப்படுத்த வேண்டும்
- உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாத ஊதியம்
- இடஒதுக்கீட்டில் வரும் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல்
- *L. C ஜெயின் கமிட்டி* பரிந்துரைப்படி அதிகாரப்பகிர்வைக் கொண்டு வருதல்
- நகர உள்ளாட்சிகளுக்குத் தனிச் சட்டம் மற்றும் ஏரியா சபையை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்
- தமிழகத்தில், *பஞ்சாயத்து ராஜ்* க்கு தனி அமைச்சகம்
- உள்ளாட்சிகளுக்கு Ombudsman system
போன்ற முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கிராமங்கள் தோறும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராமசபை தொடர்பாகப் பயனித்த அனுபவத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கையை அம்மக்களின் சார்பாக அனைத்துப் பிரதான கட்சிகளுக்கும் அனுப்பவிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் உள்ளூர் அளவில் வேலை செய்யும் இளைஞர்களிடமும் இதை கொண்டு சேர்க்கவுள்ளதாகத் தெரிவித்தனர். .
|