ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சுற்றுலாத்துறை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நமது தமிழ் நாட்டில் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமாக திகழும் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் வெளிப்பாடுதான் மாமல்ல புரத்தில் திரளும் மக்கள் எண்ணிக்கை ஒரே நாளில் ஒரு இலச்சத்தைத் தொட்டுள்ளது. இதனை மேம்படுத்தும் வகையில் அரசு மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத் துறையை முறையாகக் கவனம் செலுத்தி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தால் அதன் வருவாய் டாஸ்மாக் வருவாயைவிட அதிகமாக இருக்கும் என்றும், மக்களுக்குத் தீமை தரும், தலைமுறைகளை சீர்கெடுக்கும் டாஸ்மாக் நடத்துவதற்குப் பதில் மாற்று வருவாய் சிந்தனைக்கு, இந்த சுற்றுலா மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சம் உதவித்தொகை... விவரம்
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்குக் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்த தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகிப் பயன்பெறலாம். 100 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|