விஜய் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான புலி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ஜீவா புலி படம் குடும்பத்தோடு ரசிக்க வேண்டிய படமாக வெளிவந்திருக்கிறது என தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, புலி படம் இந்த காலாண்டு தேர்வில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அழகான படமாக வெளிவந்திருக்கிறது.
குடும்பத்தோடு ஜாலியாக சென்று பார்க்கக்கூடிய படம். இந்த படத்தை பார்க்கும்போது வேற ஒரு உலகத்துக்கு போகிற உணர்வு ஏற்படும். விஜய் முதன்முதலாக இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்திருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஜனரஞ்சகமான படத்தை கொடுத்திருக்கிறார்.
புலி படத்தில் நிறைய கிராபிக்ஸ், நிறைய ஆக்ஷன் காட்சிகள், விதவிதமான கதாபாத்திரங்கள் எல்லாம் இருக்கிறது. குழந்தைகளுக்கு இது உண்மையிலேயே பிடிக்கும். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஒரு அழகான படம் பண்ணனும்னு எனக்கே ரொம்ப நாள் ஆசை. எனக்கு தெரிந்து, குழந்தைகள் எல்லோரும் விஜய்யை, வேற ஒரு கெட்டப்பில், வேற ஒரு சூழ்நிலையில் பார்த்து நிச்சயமாக ரசிப்பாங்கன்னு நினைக்கிறேன். அதேமாதிரி அவரோட டான்ஸ், ஆக்ஷன் என எல்லாம் கலந்த கலவையாக வந்திருக்கிற படம்தான் புலி. கண்டிப்பா எல்லோரும் குடும்பத்தோட போய் பாருங்க என்றார்.
|