LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

ஜீவா - திரை விமர்சனம் !!

இயக்கம் : சுசீந்திரன்


நடிப்பு : விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, சூரி, லக்ஷ்மன், சார்லி.


இசை : டி.இமான் 


சிறுவயதில் இருந்தே ஜீவாவுக்கு(விஷ்ணு) கிரிக்கெட்டின் மீது அலாதி பிரியம். 


சின்ன வயதிலேயே தாயை இழந்த ஜீவா, தந்தை இருந்த போதிலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லி வீட்டில் வளர்ந்து வருகிறார். 


நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஜீவாவுக்கு பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. 


பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஜீவாவோ, கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு படிப்பில் ஜீரோ ஆகிறார். இதனால், ஜீவாவின் அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். 


இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் நாயகி ஜெனி (ஸ்ரீதிவ்யா) ஜீவாவை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஜீவாவும், ஜெனியை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்கள். 


ஜெனியை பிரிந்த சோகத்தில் குடி பழக்கத்திற்கு அடிமையாகிறார் ஜீவா. ஜீவாவை, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.


அங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். 


ரஞ்சித்தின் சாவினால் பாதிக்கப்படும் ஜீவா, பிறகு ஜெனியை தேடி கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக ஜீவாவிடம் கூறுகிறார். 


இறுதியில், ஜீவா காதலுக்காக, கிரிக்கெட்டை தியாகம் செய்தாரா, இல்லை கிரிக்கெட்டில் சாதித்து, காதலிலும் சாதித்தாரா என்பதே ஜீவா படத்தின் மீதி கதை...  


கதைக்கு தேவையான கிரிக்கெட் வீரர் கதாபத்திரத்தை, தன் இயல்பான நடிப்பின் மூலம் நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் விஷ்ணு... 


ஜெனியாக வருகிறார் ஸ்ரீ திவ்யா. குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். பொறுப்புகளை உணர்ந்த கல்லூரி மாணவியாகவும் அற்புதமாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா.


ரஞ்சித் கதாபாத்திரத்தில் வரும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண்.  


சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 


ஜீவாவின் பக்கத்தி வீட்டுக்காரனாக வரும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் வாங்குகிறார். 


விளையாட்டிலும் அரசியல் எப்படி விளையாடுகிறது என்பதை கதைக்களமாக எடுத்துக் கொண்டு, சிறப்பான படத்தை கொடுத்த இயக்குனர் சுசீந்திரனை பாராட்டலாம்.  


டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை.. 


மொத்தத்தில் "ஜீவா" வித்தியாசமான ஒரு கிரிக்கெட் கதை..... 

by Swathi   on 26 Sep 2014  1 Comments
Tags: ஜீவா   ஜீவா திரைவிமர்சனம்                 
 தொடர்புடையவை-Related Articles
ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! ஜீவா, அட்லீ, ஸ்ரீ திவ்யா கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
ஜீவா - திரை விமர்சனம் !! ஜீவா - திரை விமர்சனம் !!
நாளை வெளியாக இருக்கும் மெட்ராஸ், ஜீவா ஒரு சிறப்பு முன்னோட்டம் !! நாளை வெளியாக இருக்கும் மெட்ராஸ், ஜீவா ஒரு சிறப்பு முன்னோட்டம் !!
ஜீவா என்ன கதை - சொல்கிறார் சுசீந்திரன் !! ஜீவா என்ன கதை - சொல்கிறார் சுசீந்திரன் !!
பிரம்மாண்டமாக தயாராகும் யான் திரைப்படம் !! பிரம்மாண்டமாக தயாராகும் யான் திரைப்படம் !!
ஜீவாவுக்கு ஜோடியான காஜல் !! ஜீவாவுக்கு ஜோடியான காஜல் !!
என்றும் புன்னகை - திரைவிமர்சனம் !! என்றும் புன்னகை - திரைவிமர்சனம் !!
கருத்துகள்
09-Nov-2014 09:01:01 ரெ கா பாலமுருகன் said : Report Abuse
மிகச் சிறந்த படம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.