LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

'முத்தலாக்' நடைமுறை, அவசர சட்டத்தால் சட்ட விரோதமாகி விட்டது. இதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலம் தல்சேர் நகரில்,  நிலக்கரி வாயு மூலம், உரம் தயாரிப்பு தொழிற்சாலையை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திரமோடி  பேசினார். 


அவர் பேசியதாவது:
நாட்டில், ஏழை மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், பல மாநிலங்கள் இணைந்துள்ளன. 

மக்கள் நலப் பணிகளுக்காக, மத்திய அரசு ஒதுக்கும், 1 ரூபாயில், 15 பைசா மட்டுமே, மக்களைச் சென்றடைகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறினார். ஆனால், இப்போது, பயனாளி களின் வங்கிக்கணக்கில், பணத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தால், நலத்திட்டங்களை செயல்படுத்துவ தில், மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல், மத்திய அரசு, மக்களுக்காக ஒதுக்கும் ஒரு ரூபாயில், 100 பைசாவும் மக்களைச் சென்றடைகிறது.

முத்தலாக் நடைமுறையால், முஸ்லிம் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். வெறும் ஓட்டுக்காக மட்டுமே, சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளதாக, எதிர்க் கட்சிகள் நடிக் கின்றன. அதனால் தான், முத்தலாக் மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர். 
என்றாலும், தற்போது அமல்படுத்தப் பட்ட அவசர சட்டத்தால், முத்தலாக், சட்ட விரோதமாகியுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், நீதி கிடைத்துள்ளது.
மத்தியில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க, நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு பொருளாதார நீதி மட்டு மின்றி, சமூக நீதியும் வழங்க, அரசு கடமைப்பட்டு உள்ளது.

2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டம், முழுமையாக நிறைவேற்றப் பட்டு விடும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

by Mani Bharathi   on 23 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.