LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி!

வரும் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. ராஞ்சியில் நடக்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

யோகாவும், தியானமும் நம் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, பக்குவப்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சிறப்பு பெற்றவை. அதனாலேயே யோகா, அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

இன்று, நேற்றல்ல, கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் யோகா பயிற்சி நடைமுறையில் உள்ளது.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக, வருடத்தில் ஒரு நாளை,  சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார்.  ஐ.நா. சபையும் அதனை ஏற்றுக் கொண்டு,  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.

2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு 5-வது ஆண்டாக வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இந்த தினத்தை எந்த நகரில் கொண்டாடலாம் என்று பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்தது.

டெல்லி, சிம்லா, மைசூர், ஆமதாபாத், ராஞ்சி ஆகிய 5 நகரங்கள் இதற்காக ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் ராஞ்சி நகரில் வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட  முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ராஞ்சியில் நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்யத் தொடங்கி உள்ளனர்.

மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பெரிய அரசு நிகழ்ச்சி இதுதான். எனவே வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினத்தை மிகப் பிரமாண்டமான விழாவாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

by   on 04 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் முன்னோர்களைத் தேடி-  நூல் வெளியீடு எங்கள் முன்னோர்களைத் தேடி- நூல் வெளியீடு
தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும்  ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார்  மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தேசிய சித்தமருத்துவ நிறுவனத்திற்கும் , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திற்கும் ஒருங்கிணைந்த தலைமையாக பொறுப்பேற்றுள்ளார் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி
94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி! 94 வயதிலும் கனவை வெல்லலாம்! உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பகவானி தேவி!
சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருது பெறும் இந்தியப் பெண் எழுத்தாளர்
உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம் உலக மகளிர் குத்துச்சண்டை ,இந்திய வீராங்கனை நிகத் ஜரின் தங்கம்
தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி தாமஸ் கோப்பை 2022, கைப்பற்றி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய இறகுபந்து அணி
உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் முதல் முறையாக குஜராத்தில் அமைகிறது உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் முதல் முறையாக குஜராத்தில் அமைகிறது
ஐ.சி.சி-யின் Top-4 வீராங்கனைகளின் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி-யின் Top-4 வீராங்கனைகளின் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.