LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

காகம் கலைத்த கனவு

 

கைவேறு
கால்வேறாய்
அங்கங்கள் பொருத்திப் பொருத்தி
மனிதர்கள் தயாரிக்கப்படுவதை
நேற்று என் கனவில் கண்டேன். 
கண்கள் இருந்தன ஒரு பைக்குள்
மூக்கும் இருந்தது இன்னொன்றில்
முழங்கால் பின் மூட்டு
விலா குதி எல்லாமே
ஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-
தம்பதியார் வந்தார்கள்
புரட்டிப் புரட்டிச் சிலதைப்
பார்த்தார்கள் பின்னர்
விரும்பியதை எடுத்தார்கள்
கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள். 
வானம் புடவையாய் வெட்டுண்டு
கிடந்தது வீதியாய்
நான் நின்ற பாதை. 
ஒருவன் வந்தான்
துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்
பார்த்துப் புன்னகைத்தான்
அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்து
காலில் இருந்த இருதயத்தைக் கழற்றி
மனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான். 
வெயிலோ கொடுமை
எரிச்சல் தாங்கவில்லை
அவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்த
பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.
இரவு!
உடனே சூரியன் மறைந்தது
நிலவு!
நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் 
ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்து
தன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்
மனிசி!
காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லை
எங்கியிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்
கத்தியது
இடையில் நின்று முக்கியது
கா.....கா....

 

கைவேறு

கால்வேறாய்

அங்கங்கள் பொருத்திப் பொருத்தி

மனிதர்கள் தயாரிக்கப்படுவதை

நேற்று என் கனவில் கண்டேன். 

 

கண்கள் இருந்தன ஒரு பைக்குள்

மூக்கும் இருந்தது இன்னொன்றில்

முழங்கால் பின் மூட்டு

விலா குதி எல்லாமே

ஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-

தம்பதியார் வந்தார்கள்

புரட்டிப் புரட்டிச் சிலதைப்

பார்த்தார்கள் பின்னர்

விரும்பியதை எடுத்தார்கள்

கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள். 

 

வானம் புடவையாய் வெட்டுண்டு

கிடந்தது வீதியாய்

நான் நின்ற பாதை. 

 

ஒருவன் வந்தான்

துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்

பார்த்துப் புன்னகைத்தான்

அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்து

காலில் இருந்த இருதயத்தைக் கழற்றி

மனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான். 

 

வெயிலோ கொடுமை

எரிச்சல் தாங்கவில்லை

அவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்த

பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.

இரவு!

உடனே சூரியன் மறைந்தது

நிலவு!

 

நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் 

ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்து

தன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்

மனிசி!

காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லை

எங்கியிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்

கத்தியது

இடையில் நின்று முக்கியது

கா.....கா....

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.