LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

காணுமிடமெல்லாம் கார்த்திகைத் தீபங்கள்

கார்த்திகைத் திங்கள் முதல்

 

குடிசைகள் எல்லாம் 

 

சுடர் விட்டுப் பிரகாசித்து

 

எளிமை உணர்த்தும்

 

அகல் விளக்குத் தீபங்கள் !

 

 

 

இல்லங்கள்தோறும்

 

மனித உள்ளங்களிலே 

 

மத நல்லிணக்கம்

 

உணர்த்தும் உருகி நிற்கும்

 

வண்ண மெழுகுவர்த்தி தீபங்கள் !

 

 

 

தேனும் தினைமாவும்

 

தித்திப்பாய் ஒன்றாய் கலந்து

 

வாழையிலை நடுவே

 

தினைமாவை விளக்காக்கி

 

தாமரை நூலைத் திரியாக்கி

 

வாசமுள்ள நெய் ஊற்றி

 

வாழ்வில் இனிமை சேர்க்கும்

 

பூஜை அறையில் ஏற்றும்

 

மாவிளக்குத் தீபங்கள் !

 

 

 

தெய்வ வடிவங்கள்

 

பலவானாலும்- அவன்

 

ஜோதி வடிவம்தான்

 

அனைவருக்கும் உணர்த்தும்

 

அண்ணாமலைத் தீபம் !

 

 

 

அன்பு என்னும் அகல் விளக்கில்

 

ஆர்வமுடன் நெய் ஊற்றி

 

பண்பு என்னும் திரி போட்டு

 

மனிதநேயம் என்னும்

 

கார்த்திகைத் தீபங்களை

 

காணுமிடமெல்லாம்

 

கருத்துடன் ஏற்றி வைத்து

 

உருக்கமுடன் உள்ளமுருக

 

வணங்கி மகிழ்வோம் !

 

 

 

பூ. சுப்ரமணியன்,

 

பள்ளிகரணை, சென்னை 

by Subramanian   on 28 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.