|
||||||||
காணுமிடமெல்லாம் கார்த்திகைத் தீபங்கள் |
||||||||
கார்த்திகைத் திங்கள் முதல்
குடிசைகள் எல்லாம்
சுடர் விட்டுப் பிரகாசித்து
எளிமை உணர்த்தும்
அகல் விளக்குத் தீபங்கள் !
இல்லங்கள்தோறும்
மனித உள்ளங்களிலே
மத நல்லிணக்கம்
உணர்த்தும் உருகி நிற்கும்
வண்ண மெழுகுவர்த்தி தீபங்கள் !
தேனும் தினைமாவும்
தித்திப்பாய் ஒன்றாய் கலந்து
வாழையிலை நடுவே
தினைமாவை விளக்காக்கி
தாமரை நூலைத் திரியாக்கி
வாசமுள்ள நெய் ஊற்றி
வாழ்வில் இனிமை சேர்க்கும்
பூஜை அறையில் ஏற்றும்
மாவிளக்குத் தீபங்கள் !
தெய்வ வடிவங்கள்
பலவானாலும்- அவன்
ஜோதி வடிவம்தான்
அனைவருக்கும் உணர்த்தும்
அண்ணாமலைத் தீபம் !
அன்பு என்னும் அகல் விளக்கில்
ஆர்வமுடன் நெய் ஊற்றி
பண்பு என்னும் திரி போட்டு
மனிதநேயம் என்னும்
கார்த்திகைத் தீபங்களை
காணுமிடமெல்லாம்
கருத்துடன் ஏற்றி வைத்து
உருக்கமுடன் உள்ளமுருக
வணங்கி மகிழ்வோம் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிகரணை, சென்னை |
||||||||
by Subramanian on 28 Nov 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|