LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

காப்புப் பருவம்

 

திருமால்
390 பூமாலை சூடுமொரு கும்பம் பொருந்துபரி பூரணப் பரமர்சகல
      புவனப் பரப்புயி ரனைத்துமின் பக்களி பொருந்தவிரு கும்பநறிய,
தேமாலை சூடிப் பொருந்தப் பொறுத்தநுண் சிற்றிடைக் கொம்பைவம்பைச்
      செறிபொழில் சுலாயகுட மூக்கமரு மங்களச் செல்வியை யுவந்துகாக்க,
மாமாலை யைம்பான் மலர்ப்பசுங் கொடியையகன் மார்பின் புறத்துவைத்த,
      வண்ணந் தெரிந்தும் பொறுத்திருந் தாணில மடக்கொடி யெனத்தெரிந்து,
பாமாலை சாலுமொரு கோட்டின் புறத்தும் பராவிய வயிற்றகத்தும்,
      பண்பினப் படிமகளை வைத்து மகிழ் வித்துமகிழ் பைந்துழாய்த் தோளண்ணலே. (1)
அமுதகும்பேசர். 
வேறு
391 பொன்செய்கொன்றையொடு மின்செய்வெண்பொடிபொ லிந்தமைந்தமரு மந்தனிற்றேக்கடி -
      பொன்றலின்றிமுகை விண்டதண்டுளவு பொங்குசந்தமும ளைந்திடச்சேர்த்தவர்,
பொன்புணர்ந்தவம டந்தைபின்றிகழ் புறந்தழும்புபடியு மம்பெனக் கூட்டினர் -
      புங்கமங்கையவள் வெந்புறங் கருணை பொங்கநன்கமரி ரும்புகழ்க் காட்சியர், 
கொன்செய்தொண்டருட னண்டருங்குழுமல் கொண்டிறைஞ்சநவி லம்பலக்கூத்தினர் - 
      கொங்குதங்குமல ரின்கணங்கையர்கு ழைந்துகும்பிடுக ருங்களச் சீர்த்தியர்,
குங்குமங்கலவு மென்புயங்கொளொரு குன்றர்குன் றமர்பெ ருந்திறற்பேற்றினர் -
      குன்றலின்றிமறை யந்தநன்றுசெறி கும்பலிங்கர்சா ணுத்தலைச்சூட்டுது,
மன்செயன்புடையர் நெஞ்சமென்றிசை மலர்ந்தகஞ்சமம ரஞ்சநற்பேட்டினை-
      வஞ்சநெஞ்சர்கன வின்கணும்புகன் மறந்திருந்தவரு ளம்பையைப் பாற்பசு,
வந்துமுன்பொர்புன றந்திறைஞ்சவுண் மகிழ்ந்தசுந்தரியை யண்டமுற்றேத்திட - 
      மன்றநன்றருள்சு ரந்துநின்றருண்ம ணந்தகொம்பையொரு வம்பையிட்டார்த்திடும், 
மின்செய்கொங்கையமு தங்கவர்ந்தோர்மழ வென்புநைந்துருகு செந்தமிழ்ப்பாச்சொல - 
      வின்பவுந்தியுயிர் முங்கமுன்புதவி யெஞ்சலின்றியொளிர் வஞ்சியைத்தீட்டரி, 
தென்றணங்குகளு ளங்கொள்சந்தவுரு வின்பசுந்திருவை நம்புமுட்பேற்றினை - 
      யென்றுதங்குமதி லங்குடந்தைநக ரெங்கண்மங்களம டந்தையைக்காக்கவே. (2)
ஆதிவிநாயகர்
வேறு
392 பார்தரு நான்முக னோர்தலை யேற்றொளிர் 
      பான்மையர் மான்முகி லூர்திற மேய்ப்புற
வார்தரு மோதகர் மூடிக மேற்பொலி 
      யாதிவி நாயகர் தாண்மல ரேத்துது
மோர்தரு வார்மன னூடவிர் பேற்றினை 
      யோமுத லாமறை யோலிடு வாழ்க்கைமெய்
தேர்தரு தேவர்கள் சூழ்குட மூக்கமர் 
      தேவியை யோவலில் காவல தாற்றவே. (3)
முருகக்கடவுள்
வேறு
393 அருமறைக்குடிலை யுளதுரைத்துநவி லறையிருக்கெனவி 
      னாவாமடக்குபு நீண்முடித்தாக்கிமெல் -- 
லலரவற்சிறையி னிடுபுமுக்கணிறை யவனிரப்பவிடு ஞானோதயக்கும
      ரேசனைக்காப்பொலி,
குருமணித்தவிசி னமரிறைக்குமகள் கொழுமலர்க்கைதழு
      வேர்சால் புயத்தனை நீள்வரைப்பாற்றுதை -- 
குறவர்பெற்றவொரு மடநடைக்குமரி கொழுநனைப்பொருவில்
      காலாயுதக்கொடி யாளனைப்போற்றுதும்,
மருமலர்க்கணமர் மகளிரைத்தொழுநர் மருவுறத்தருகண்
      மானாளைமுற்கொடு மாமலப்பூட்டற
வழிநிலைத்தகுதி யொழியெமக்குமொழி வகையனுக்கிரக
      மேயோவறப்புரி வாலனப்பேட்டினை
யுருகுபத்திமைய ருளவளத்தளியி னொளிர்விளர்க்கையமு
      தேயாமொழிச்சியை யாரணப்பேற்றினை
யொருகுடத்தமரு மிருவருக்கரிய வொருவர்பக்கமமர் 
      மாதேவியைப்பெரு வாழ்வினைக்காக்கவே. (4)
பிரமதேவர்
வேறு
394 ஈன்றவற் கில்லவளு முணவுமா கப்புவியு மியல்கடி மணஞ்செய்தேமு 
      மினியவுவ ளகமுமா கக்கடலு மாலையு மிருப்பிடமு மாகவனமுந்
தோன்றவழி யுங்குடையு மாகவரை யுஞ்செய்து சுதன்மகன் றிறவுலோலாத்
      தூயதாய் மனைவிதற் குறையுளுஞ் செய்துமகிழ் தோன்றனான் முகனளிக்க
நான்றசடை யார்கும்ப நாயகரெனும்பெயர் நயத்தல்கண் டங்கண்மீன -
      நாயகி யிடைச்சிங்க நாயகி யருட்கன்னி நாயகி யறம்பலவும்வாழ்,
ஆன்றகைக் கடகநா யகிகாது மகரநா யகிநுதற் றனுநாயகி -
      யடியமிதை யத்துலா நாயகி யெனப்பல வமைந்தமங் களவுலமலயயே. (5)
இந்திரன் 
395 ஓங்குதிரை பலவெழும் பாற்கடற் கருவூல முதவுபல பொருள்களுள்ளு -
      மொருதம்பி பாகமோ ராரமொரு பெண்ணமு துடன்கழிய மூத்ததற்குப்,
பாங்குயர் விசேடபா கம்பெண்கள் பலர்தருப் பலகாம தேனுவென்னும் -
      பசுநிதிய மணியானை பரியாதி பெற்றுமகிழ் பண்ணவர்க் கரசுகாக்க,
வீங்குகரு ணைப்பிழம் பாயகும் பேசர்க்கு மேவுதாய் தநயைதங்கை -
      விழைமனைவி யாகியொரு தான்மருவ லாலவர்செ மேனியிற் பாதிகொண்டு,
தேங்குபல வோடங்க மல்லாத வேணியிற் சீரகக் கங்கைமங்கை -
      செறிதரத் தகவினமர் வித்துமகிழ் மங்களச் செல்வச்செ ழுங்கொடியையே. (6)
திருமகள்
வேறு
396 ஆரு நினைப்பா கியதிறப்பு மடரு மறப்பா கியவடைப்பும்
      ஆய தொழிலை நாடோறு மாற்றுஞ் சகல கேவலம்போ
லோரு மகன்பே ரனுமுடன்வந் துதித்த வனுமா மிருபுலவ
      ருரைத்த வியற்று மிதழ்க்கதவத் தொண்பூ மனையாள் பதம்பணிவாம்
பாரும் விசும்பு முய்யவொரு பகழி சிலைகைக் கொண்டமுதம்
      பரவு மொருகும் பஞ்சிதைத்த பரமர் போற்ற ஞானசுதை
வாரு மிருகும் பம்பரித்து வரிவிற் கழையு மலரம்பு
      மாணக் கொண்ட மங்களமா மயிலை யினிது காக்கவென்றே. (7)
நாமகள் 
397 கற்றா வெனவுட் கரைந்துருகக் கல்லா வெமது வாக்கிடத்துங்
      கலந்த கருணை யாற்பிறந்து கதிக்குஞ் சீர்த்தி யுடம்பினுக்கும்
வற்றா வதற்குக் காரணமாய் வயங்குந் தெய்வ வுடம்பினுக்கும்
      வருவேற் றுமைமாற் றியவெண்டா மரைப்பி ராட்டி பதம்பணிவாஞ்
சற்றா தரவு கொடுத்ததுவே சார்பா வயங்கி யதுபெருக்கித்
      தணவா மலமா திகடவிர்த்துத் தனித்த வான்ம மடவாரை
முற்றா வொருதற் குரியதவன் முகிழ்க்கும் போக முறவிடுத்து
      முடியா மகிழ்கூர் குடமூக்கு முதல்வி தனைக்காத் தருளென்றே. (8)
துர்க்கை
398 சயங்காத் திருக்கு மடங்கல்விடு தறுகண் மகிடந் தலைசாயத்
      தகுவ மகிடத் தலைசாய்த்துத் தயங்கு மணியா தனம்பரிக்கு
மியங்காச் சிங்க மிவரமா ரெவரு நாணந் தலைக்கொள்ள
      வியங்குஞ் சிங்க மிவர்கன்னி யெழிற்பொற் பாத முடிக்கணிவா
முயங்காக் கருணைத் திறத்தின்மல ரும்பன் படைக்க மால்காக்க
      வொண்ணா வமுத கடத்துதித்த வொருவர் திருமே னியினளவாப் 
பயங்காட் டிடுவான் கவர்ந்ததொரு பாதி யெனினு மவருள்ளம் 
      பண்பின் முழுதுங் கவர்ந்துமகிழ் பாவை தனைக்காத் தருளென்றே. 
(9)
சத்தமாதர்
வேறு
399 திருமறை தேர்பன மீதுற்றபொற்பின - டிகழிட பா?சல மூர்தற்றிறத்தினள் - 
      சிறைமயின் மேன்மயி னேருற்றுகைப்பவள் - செறியர வூணுள தேறித்திருப்புந, 
ளிருவிறலார்தரு சீயப்புறத்தின- ளெழிலியின் மாமதம் விசுற்ற வெற்பின
      ளிருளில் விராவொரு பேயைச்செலுத்துந - ளெனுமெழு மாதர்க டாளைப்பழிச்சுது - 
மருமல ரோன்முத லோரற்பினித்தலும் - வழிபட வாரரு ளேயச்செலுத்தியை - 
      வருகடல் சூழுல காளுற்றசத்தியை - மலர்கழை கூரையில் பாசக்கரத்தியை, 
யருமறை யாகமம் யாவைக்கும்வித்தென - வவிர்குட மூடெழு சோதிப்பரற்கினி - 
      தமைதர வோர்பயன் மேவுற்ற தத்தையை - யருளுரு வாமொரு மாதைப்புரக்கவே. (10)
முப்பத்துமூவர் 
வேறு
400 அகனமர்ந்துதொழு மடியர்சிந்தையமு தனையநன்றமர்ப
            ராபரையை யெப்பெற்றி யாருநன்கேத்திட - 
      வருள்சுரந்துபொலி பெருமையம்பிகையை யளவிலின்பசுக
            பூரணியை யெ?ப்பற்ற கோமளங்கூர்த்திடு, 
முகன்மருங் குனலி முலையகங்கொணகை முகிழ்செறிந்தகரு 
            வார்குழன் முதற்பொற்ற யாவையுந்தீட்டுபு - 
      முளரிமங்கையர்த மனனகங்கொடுபன் முகமன்விண்டுதெரி
            காரணியை யப்புற்று லாநறும்பூச்சடை, 
யிகன்மலிந்தபுய விறைவர்தஞ்சமுற விருகைகொண்டுதழு
            வாரணியை முட்டுற்றிடா நலம்பூட்டிடு - 
      மியல்புகொண்டவிரு விழிமடந்தையைந லினிமைதங்குசுவை
            யாரமுதை யெப்பற்று மேவிடுந்தீத்தொழி, 
னகன்மறந்துதமி யனுமுயர்ந்திடமெய் நலமியைந்தருள்பு
            ராதனியை வட்டத்து மேவுமண்போற்றிடு - 
      நலகுடந்தைநக ரமர்தருங்கருணை நவிலுமங்களையை
            நால்வகைய முப்பத்து மூவருங்காக்கவே. (11)

 

திருமால்

390 பூமாலை சூடுமொரு கும்பம் பொருந்துபரி பூரணப் பரமர்சகல

      புவனப் பரப்புயி ரனைத்துமின் பக்களி பொருந்தவிரு கும்பநறிய,

தேமாலை சூடிப் பொருந்தப் பொறுத்தநுண் சிற்றிடைக் கொம்பைவம்பைச்

      செறிபொழில் சுலாயகுட மூக்கமரு மங்களச் செல்வியை யுவந்துகாக்க,

மாமாலை யைம்பான் மலர்ப்பசுங் கொடியையகன் மார்பின் புறத்துவைத்த,

      வண்ணந் தெரிந்தும் பொறுத்திருந் தாணில மடக்கொடி யெனத்தெரிந்து,

பாமாலை சாலுமொரு கோட்டின் புறத்தும் பராவிய வயிற்றகத்தும்,

      பண்பினப் படிமகளை வைத்து மகிழ் வித்துமகிழ் பைந்துழாய்த் தோளண்ணலே. (1)

 

அமுதகும்பேசர். 

வேறு

391 பொன்செய்கொன்றையொடு மின்செய்வெண்பொடிபொ லிந்தமைந்தமரு மந்தனிற்றேக்கடி -

      பொன்றலின்றிமுகை விண்டதண்டுளவு பொங்குசந்தமும ளைந்திடச்சேர்த்தவர்,

பொன்புணர்ந்தவம டந்தைபின்றிகழ் புறந்தழும்புபடியு மம்பெனக் கூட்டினர் -

      புங்கமங்கையவள் வெந்புறங் கருணை பொங்கநன்கமரி ரும்புகழ்க் காட்சியர், 

கொன்செய்தொண்டருட னண்டருங்குழுமல் கொண்டிறைஞ்சநவி லம்பலக்கூத்தினர் - 

      கொங்குதங்குமல ரின்கணங்கையர்கு ழைந்துகும்பிடுக ருங்களச் சீர்த்தியர்,

குங்குமங்கலவு மென்புயங்கொளொரு குன்றர்குன் றமர்பெ ருந்திறற்பேற்றினர் -

      குன்றலின்றிமறை யந்தநன்றுசெறி கும்பலிங்கர்சா ணுத்தலைச்சூட்டுது,

மன்செயன்புடையர் நெஞ்சமென்றிசை மலர்ந்தகஞ்சமம ரஞ்சநற்பேட்டினை-

      வஞ்சநெஞ்சர்கன வின்கணும்புகன் மறந்திருந்தவரு ளம்பையைப் பாற்பசு,

வந்துமுன்பொர்புன றந்திறைஞ்சவுண் மகிழ்ந்தசுந்தரியை யண்டமுற்றேத்திட - 

      மன்றநன்றருள்சு ரந்துநின்றருண்ம ணந்தகொம்பையொரு வம்பையிட்டார்த்திடும், 

மின்செய்கொங்கையமு தங்கவர்ந்தோர்மழ வென்புநைந்துருகு செந்தமிழ்ப்பாச்சொல - 

      வின்பவுந்தியுயிர் முங்கமுன்புதவி யெஞ்சலின்றியொளிர் வஞ்சியைத்தீட்டரி, 

தென்றணங்குகளு ளங்கொள்சந்தவுரு வின்பசுந்திருவை நம்புமுட்பேற்றினை - 

      யென்றுதங்குமதி லங்குடந்தைநக ரெங்கண்மங்களம டந்தையைக்காக்கவே. (2)

 

ஆதிவிநாயகர்

வேறு

392 பார்தரு நான்முக னோர்தலை யேற்றொளிர் 

      பான்மையர் மான்முகி லூர்திற மேய்ப்புற

வார்தரு மோதகர் மூடிக மேற்பொலி 

      யாதிவி நாயகர் தாண்மல ரேத்துது

மோர்தரு வார்மன னூடவிர் பேற்றினை 

      யோமுத லாமறை யோலிடு வாழ்க்கைமெய்

தேர்தரு தேவர்கள் சூழ்குட மூக்கமர் 

      தேவியை யோவலில் காவல தாற்றவே. (3)

 

முருகக்கடவுள்

வேறு

393 அருமறைக்குடிலை யுளதுரைத்துநவி லறையிருக்கெனவி 

      னாவாமடக்குபு நீண்முடித்தாக்கிமெல் -- 

லலரவற்சிறையி னிடுபுமுக்கணிறை யவனிரப்பவிடு ஞானோதயக்கும

      ரேசனைக்காப்பொலி,

குருமணித்தவிசி னமரிறைக்குமகள் கொழுமலர்க்கைதழு

      வேர்சால் புயத்தனை நீள்வரைப்பாற்றுதை -- 

குறவர்பெற்றவொரு மடநடைக்குமரி கொழுநனைப்பொருவில்

      காலாயுதக்கொடி யாளனைப்போற்றுதும்,

மருமலர்க்கணமர் மகளிரைத்தொழுநர் மருவுறத்தருகண்

      மானாளைமுற்கொடு மாமலப்பூட்டற

வழிநிலைத்தகுதி யொழியெமக்குமொழி வகையனுக்கிரக

      மேயோவறப்புரி வாலனப்பேட்டினை

யுருகுபத்திமைய ருளவளத்தளியி னொளிர்விளர்க்கையமு

      தேயாமொழிச்சியை யாரணப்பேற்றினை

யொருகுடத்தமரு மிருவருக்கரிய வொருவர்பக்கமமர் 

      மாதேவியைப்பெரு வாழ்வினைக்காக்கவே. (4)

 

பிரமதேவர்

வேறு

394 ஈன்றவற் கில்லவளு முணவுமா கப்புவியு மியல்கடி மணஞ்செய்தேமு 

      மினியவுவ ளகமுமா கக்கடலு மாலையு மிருப்பிடமு மாகவனமுந்

தோன்றவழி யுங்குடையு மாகவரை யுஞ்செய்து சுதன்மகன் றிறவுலோலாத்

      தூயதாய் மனைவிதற் குறையுளுஞ் செய்துமகிழ் தோன்றனான் முகனளிக்க

நான்றசடை யார்கும்ப நாயகரெனும்பெயர் நயத்தல்கண் டங்கண்மீன -

      நாயகி யிடைச்சிங்க நாயகி யருட்கன்னி நாயகி யறம்பலவும்வாழ்,

ஆன்றகைக் கடகநா யகிகாது மகரநா யகிநுதற் றனுநாயகி -

      யடியமிதை யத்துலா நாயகி யெனப்பல வமைந்தமங் களவுலமலயயே. (5)

 

இந்திரன் 

395 ஓங்குதிரை பலவெழும் பாற்கடற் கருவூல முதவுபல பொருள்களுள்ளு -

      மொருதம்பி பாகமோ ராரமொரு பெண்ணமு துடன்கழிய மூத்ததற்குப்,

பாங்குயர் விசேடபா கம்பெண்கள் பலர்தருப் பலகாம தேனுவென்னும் -

      பசுநிதிய மணியானை பரியாதி பெற்றுமகிழ் பண்ணவர்க் கரசுகாக்க,

வீங்குகரு ணைப்பிழம் பாயகும் பேசர்க்கு மேவுதாய் தநயைதங்கை -

      விழைமனைவி யாகியொரு தான்மருவ லாலவர்செ மேனியிற் பாதிகொண்டு,

தேங்குபல வோடங்க மல்லாத வேணியிற் சீரகக் கங்கைமங்கை -

      செறிதரத் தகவினமர் வித்துமகிழ் மங்களச் செல்வச்செ ழுங்கொடியையே. (6)

 

திருமகள்

வேறு

396 ஆரு நினைப்பா கியதிறப்பு மடரு மறப்பா கியவடைப்பும்

      ஆய தொழிலை நாடோறு மாற்றுஞ் சகல கேவலம்போ

லோரு மகன்பே ரனுமுடன்வந் துதித்த வனுமா மிருபுலவ

      ருரைத்த வியற்று மிதழ்க்கதவத் தொண்பூ மனையாள் பதம்பணிவாம்

பாரும் விசும்பு முய்யவொரு பகழி சிலைகைக் கொண்டமுதம்

      பரவு மொருகும் பஞ்சிதைத்த பரமர் போற்ற ஞானசுதை

வாரு மிருகும் பம்பரித்து வரிவிற் கழையு மலரம்பு

      மாணக் கொண்ட மங்களமா மயிலை யினிது காக்கவென்றே. (7)

 

நாமகள் 

397 கற்றா வெனவுட் கரைந்துருகக் கல்லா வெமது வாக்கிடத்துங்

      கலந்த கருணை யாற்பிறந்து கதிக்குஞ் சீர்த்தி யுடம்பினுக்கும்

வற்றா வதற்குக் காரணமாய் வயங்குந் தெய்வ வுடம்பினுக்கும்

      வருவேற் றுமைமாற் றியவெண்டா மரைப்பி ராட்டி பதம்பணிவாஞ்

சற்றா தரவு கொடுத்ததுவே சார்பா வயங்கி யதுபெருக்கித்

      தணவா மலமா திகடவிர்த்துத் தனித்த வான்ம மடவாரை

முற்றா வொருதற் குரியதவன் முகிழ்க்கும் போக முறவிடுத்து

      முடியா மகிழ்கூர் குடமூக்கு முதல்வி தனைக்காத் தருளென்றே. (8)

 

துர்க்கை

398 சயங்காத் திருக்கு மடங்கல்விடு தறுகண் மகிடந் தலைசாயத்

      தகுவ மகிடத் தலைசாய்த்துத் தயங்கு மணியா தனம்பரிக்கு

மியங்காச் சிங்க மிவரமா ரெவரு நாணந் தலைக்கொள்ள

      வியங்குஞ் சிங்க மிவர்கன்னி யெழிற்பொற் பாத முடிக்கணிவா

முயங்காக் கருணைத் திறத்தின்மல ரும்பன் படைக்க மால்காக்க

      வொண்ணா வமுத கடத்துதித்த வொருவர் திருமே னியினளவாப் 

பயங்காட் டிடுவான் கவர்ந்ததொரு பாதி யெனினு மவருள்ளம் 

      பண்பின் முழுதுங் கவர்ந்துமகிழ் பாவை தனைக்காத் தருளென்றே. 

(9)

 

சத்தமாதர்

வேறு

399 திருமறை தேர்பன மீதுற்றபொற்பின - டிகழிட பா?சல மூர்தற்றிறத்தினள் - 

      சிறைமயின் மேன்மயி னேருற்றுகைப்பவள் - செறியர வூணுள தேறித்திருப்புந, 

ளிருவிறலார்தரு சீயப்புறத்தின- ளெழிலியின் மாமதம் விசுற்ற வெற்பின

      ளிருளில் விராவொரு பேயைச்செலுத்துந - ளெனுமெழு மாதர்க டாளைப்பழிச்சுது - 

மருமல ரோன்முத லோரற்பினித்தலும் - வழிபட வாரரு ளேயச்செலுத்தியை - 

      வருகடல் சூழுல காளுற்றசத்தியை - மலர்கழை கூரையில் பாசக்கரத்தியை, 

யருமறை யாகமம் யாவைக்கும்வித்தென - வவிர்குட மூடெழு சோதிப்பரற்கினி - 

      தமைதர வோர்பயன் மேவுற்ற தத்தையை - யருளுரு வாமொரு மாதைப்புரக்கவே. (10)

 

முப்பத்துமூவர் 

வேறு

400 அகனமர்ந்துதொழு மடியர்சிந்தையமு தனையநன்றமர்ப

            ராபரையை யெப்பெற்றி யாருநன்கேத்திட - 

      வருள்சுரந்துபொலி பெருமையம்பிகையை யளவிலின்பசுக

            பூரணியை யெ?ப்பற்ற கோமளங்கூர்த்திடு, 

முகன்மருங் குனலி முலையகங்கொணகை முகிழ்செறிந்தகரு 

            வார்குழன் முதற்பொற்ற யாவையுந்தீட்டுபு - 

      முளரிமங்கையர்த மனனகங்கொடுபன் முகமன்விண்டுதெரி

            காரணியை யப்புற்று லாநறும்பூச்சடை, 

யிகன்மலிந்தபுய விறைவர்தஞ்சமுற விருகைகொண்டுதழு

            வாரணியை முட்டுற்றிடா நலம்பூட்டிடு - 

      மியல்புகொண்டவிரு விழிமடந்தையைந லினிமைதங்குசுவை

            யாரமுதை யெப்பற்று மேவிடுந்தீத்தொழி, 

னகன்மறந்துதமி யனுமுயர்ந்திடமெய் நலமியைந்தருள்பு

            ராதனியை வட்டத்து மேவுமண்போற்றிடு - 

      நலகுடந்தைநக ரமர்தருங்கருணை நவிலுமங்களையை

            நால்வகைய முப்பத்து மூவருங்காக்கவே. (11)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.