|
||||||||
காப்புப்பருவம் |
||||||||
837 பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் -
பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர்,
தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு -
தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம்,
பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே -
பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத்,
தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் -
செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(1)
சனற்குமாரமுனிவர் - வேறு.
838 எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ
னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர்
தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ்
சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா
மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த
வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற்
றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித்
திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.
(2)
சத்தியஞானதரிசனிகள் - வேறு.
839 பொய்யாத வேதச் சிரப்பொருளை யாரும் புறங்காண வானநின்றும் -
பொலிதரு தியாகமணி கொடுவந்த மன்னனும் புந்திநாண் கொளவவித்தை,
தையாத சருவசங் கப்பரித் தியாகமணி தண்பெருங் கைலைநின்றுந் -
தவாதெங்கு நோக்கக் கொணர்ந்தசத் தியஞான தரிசனிக டாள்பரசுவா,
மெய்யாத மாமலங் கழுநீ ரெனற்கியைய வினியகழு நீருமாயை -
யெழினிநூ றித்தற்றெரிக்குங்கண் மணியெனற் கியைக்கண் மணியுநீக்கஞ்,
செய்யாத வினைநீறு செயுமெனற் கியையத் திருந்தும்வெண் ணீறுமேனி -
திகழவா வடுதுறையின் மருவுமம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(3)
பரஞ்சோதிமாமுனிவர் - வேறு.
840 அந்த மரூஉஞ்சீர் முசுகுந்த னன்பிற் றந்த மணியேற்ற
வான்ற நகரங் களுடசிறந்த வாரூ ரெனச்சத் தியஞானி
தந்த மணிகைக் கொண்டுயர்ந்த தக்கோர் பல்லோ ருளுஞ்சிறந்த
தலைவ னாய பரஞ்சோதி தாட்டா மரைக டலைக்கணிவா
மிந்த வுலகிற் பரிபாக மெய்தார் பேத மபேதமென
விசைத்துப் பிணங்கா தெய்துவித்தே யியில்பு விளக்க வுருக்கொண்டு
வந்த கருணைப் பெருஞ்செல்வன் வான்றோய் பொழில்சூழ் திருத்துறைசை
மருவுங் குருவம் பலவாண வள்ள றனைக்காத் தருள்கவென்றே.
(4)
மெய்கண்டசிவாசாரியர்.
841 போந்து புறத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே
பொங்கி யகத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே
யேந்து புடவி யிடத்தெனப்பன்னிரு சூத்திரஞ்செவ் வாய்மலர்ந்த
விணையில் வெண்ணெய் மெய்கண்டா னிணைத்தா மரைத்தா ளிறைஞ்சுவாம்
வாய்நத வடபா லாலவனம் வயங்கு தென்பாற் குருந்தவன
மருவு வாரு மருள்பெறுவான மன்னு நடுப்பா லரசவனத்
தாய்ந்த சிங்க நோக்கமென வமர்ந்து நோக்குங் குருசிங்க
மருள்கூர் திருவம் பலவாண வடிக டமைக்காத் தருள்கவென்றே.
(5)
அருணந்திசிவாசாரியர்.
842 போத நவின்ற பெருங்குரவன் பொற்பார் சித்தி கேட்டுமகிழ்
பூத்துச் சிறப்புப் பாயிரமாப் பொலிய முதலா சிரியன்பேர்
சாத நினக்குத் தகுமென்று சார்த்தச் சிறந்த திருத்துறையூர்த்
தலைமை யாள னருணந்தி தாட்டா மரைக டலைக்கணிவா
நாத மகன்ற பெருநிலையை நாடு முயிர்கட் கருள்புரிந்து
நாளும் பசுத்து வந்தீர்ப்போ நாமென் றதனுக் கறிகுறியாச்
சீத மலியும் புனற்றடஞ்சூழ் திருவா வடுதண் டுமறைமருவுஞ்
செல்வ னருளம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.
(6)
மறைஞானசம்பந்த சிவாசாரியர் - வேறு.
843 அரியபுக ழாசிரியர் பலருமுடை யவரே
யாயினும்பங் கயம்போலத் தலைமைதரு வழக்காற்
பிரியமிகு மறைஞான சம்பந்த னெனும்பேர்
பெற்றுவிளங் கியகடந்தைப் பெரியோனைத் தொழுவாங்
கரியமலப் பிணிகழலக் கழல்சூட்டி யடியேங்
கன்மனத்தும் வன்மனத்தர் கருதாத கனகப்
பரியமதிற் றுறைசையகத் துங்கழலா தமரம்
பலவாண தேசிகனைக் காத்தருள்க வென்றே.
(7)
உமாபதிசிவாசாரியர்.
844 விரும்புசிவப் பிரகாசந் தவப்பிரகா சமிலா
வெய்யயாங் களுமடையச் சிவப்பிரகா சத்தோ
டரும்புபல நூலருளிச் செய்தவருஞ் குரவ
னண்ணலுமா பதிசிவனை யஞ்சலித்துத் துதிப்பாம்
பெரும்புலவர் பெரியோனென் றறிந்தேத்தப் பட்ட
பின்னருமம் பலவாணப் பெயர்புனைந்த கள்வன்
கரும்புகமு கெனவோங்கும் வயன்மலிதண் டுறைசைக்
கண்ணமரண் ணலைநாளுங் காத்தருள்க வென்றே.
(8)
அருணமச்சிவாயர்.
845 இருண்மலமு மாயையுமற் றிருவினையுங் கழிந்தின்
பெய்திடவெய் திடுமுயிர்கட் கினிதருளுந் திறத்தா
லருணமச்சி வாயனெனக் காரணப்பேர் புனைந்த
வண்ணலடித் தாமரைக ணண்ணல்குறித் திடுவாம்
பொருண்மலிசெங் கொன்றையொடு வெள்ளெருக்கு மொப்பப்
பொறுத்தபழங் காரணத்தா னலவர்துதி யொடுமித்
தெருண்மலியா வெந்துதியுங் கொண்டுதுறை சையில்வாழ்
தேசிகனம் பலவாணன் றனைக்காக்க வென்றே.
(9)
சித்தர் சிவப்பிரகாசர்.
846 தம்மடியர்க் கிருக்குமிடம் வரையறுத்துத் தெரித்துத்
தமக்கிருக்கு மிடங்குறியா தெவ்விடத்தும் பயிலுஞ்
செம்மனத்தா ராயினுமெஞ் சித்தத்து மமர்ந்த
சித்தர்சிவப் பிரகாசர் சேவடிக டொழுவாஞ்
செம்மலரும் வெண்மலரு மெடுத்தடியர் தூற்றச்
சேவடிமேல் வீழ்தலிரு தேசிகரும் பலகா
லம்மவணங் குதல்பொருவக் கோகழிவீற் றிருக்கு
மம்பலவா ணனைநாள்க டொறுங்காக்க வென்றே.
(10)
நமச்சிவாயமூர்த்திகள் முதலிய பதினால்வர். - வேறு.
847 புரவு மிகுவள் ளுவர்குறளுட் புணர்பத் தினுமுள் பொருளிதெனப்
புகலு மொன்றிற் குருமூர்த்தம் புகல்பத் திலுமுள் பொருளிதென்று
பரவு முலக முணர்ந்தேத்தப் படிவங் கொண்டு வெளிவந்த
பண்பார் நமச்சி வாயர்முதற் பதினால் வரையுந் தொழுதெழுவாங்
குரவு புனையா வருமிருகை கூப்பப் பொலியு மரசென நூல்
குறியா வுணர்ச்சி யாளருமுட் கொண்டு தெளிதற் கறிகுறியா
விரவு மரச வனத்தமர்ந்து விளங்கா நின்ற சின்மயனை
மிக்க புகழம் பலவாண மேலோன் றனைக்காத் தருள்கவென்றே.
(10)
837 பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் - பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர், தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு - தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம், பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே - பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத், தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் - செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே. (1) சனற்குமாரமுனிவர் - வேறு. 838 எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர் தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ் சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற் றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித் திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே. (2)
சத்தியஞானதரிசனிகள் - வேறு. 839 பொய்யாத வேதச் சிரப்பொருளை யாரும் புறங்காண வானநின்றும் - பொலிதரு தியாகமணி கொடுவந்த மன்னனும் புந்திநாண் கொளவவித்தை, தையாத சருவசங் கப்பரித் தியாகமணி தண்பெருங் கைலைநின்றுந் - தவாதெங்கு நோக்கக் கொணர்ந்தசத் தியஞான தரிசனிக டாள்பரசுவா, மெய்யாத மாமலங் கழுநீ ரெனற்கியைய வினியகழு நீருமாயை - யெழினிநூ றித்தற்றெரிக்குங்கண் மணியெனற் கியைக்கண் மணியுநீக்கஞ், செய்யாத வினைநீறு செயுமெனற் கியையத் திருந்தும்வெண் ணீறுமேனி - திகழவா வடுதுறையின் மருவுமம் பலவாண தேவனைக் காக்கவென்றே. (3)
பரஞ்சோதிமாமுனிவர் - வேறு. 840 அந்த மரூஉஞ்சீர் முசுகுந்த னன்பிற் றந்த மணியேற்ற வான்ற நகரங் களுடசிறந்த வாரூ ரெனச்சத் தியஞானி தந்த மணிகைக் கொண்டுயர்ந்த தக்கோர் பல்லோ ருளுஞ்சிறந்த தலைவ னாய பரஞ்சோதி தாட்டா மரைக டலைக்கணிவா மிந்த வுலகிற் பரிபாக மெய்தார் பேத மபேதமென விசைத்துப் பிணங்கா தெய்துவித்தே யியில்பு விளக்க வுருக்கொண்டு வந்த கருணைப் பெருஞ்செல்வன் வான்றோய் பொழில்சூழ் திருத்துறைசை மருவுங் குருவம் பலவாண வள்ள றனைக்காத் தருள்கவென்றே. (4)
மெய்கண்டசிவாசாரியர். 841 போந்து புறத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே பொங்கி யகத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே யேந்து புடவி யிடத்தெனப்பன்னிரு சூத்திரஞ்செவ் வாய்மலர்ந்த விணையில் வெண்ணெய் மெய்கண்டா னிணைத்தா மரைத்தா ளிறைஞ்சுவாம் வாய்நத வடபா லாலவனம் வயங்கு தென்பாற் குருந்தவன மருவு வாரு மருள்பெறுவான மன்னு நடுப்பா லரசவனத் தாய்ந்த சிங்க நோக்கமென வமர்ந்து நோக்குங் குருசிங்க மருள்கூர் திருவம் பலவாண வடிக டமைக்காத் தருள்கவென்றே. (5)
அருணந்திசிவாசாரியர். 842 போத நவின்ற பெருங்குரவன் பொற்பார் சித்தி கேட்டுமகிழ் பூத்துச் சிறப்புப் பாயிரமாப் பொலிய முதலா சிரியன்பேர் சாத நினக்குத் தகுமென்று சார்த்தச் சிறந்த திருத்துறையூர்த் தலைமை யாள னருணந்தி தாட்டா மரைக டலைக்கணிவா நாத மகன்ற பெருநிலையை நாடு முயிர்கட் கருள்புரிந்து நாளும் பசுத்து வந்தீர்ப்போ நாமென் றதனுக் கறிகுறியாச் சீத மலியும் புனற்றடஞ்சூழ் திருவா வடுதண் டுமறைமருவுஞ் செல்வ னருளம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே. (6)
மறைஞானசம்பந்த சிவாசாரியர் - வேறு. 843 அரியபுக ழாசிரியர் பலருமுடை யவரே யாயினும்பங் கயம்போலத் தலைமைதரு வழக்காற் பிரியமிகு மறைஞான சம்பந்த னெனும்பேர் பெற்றுவிளங் கியகடந்தைப் பெரியோனைத் தொழுவாங் கரியமலப் பிணிகழலக் கழல்சூட்டி யடியேங் கன்மனத்தும் வன்மனத்தர் கருதாத கனகப் பரியமதிற் றுறைசையகத் துங்கழலா தமரம் பலவாண தேசிகனைக் காத்தருள்க வென்றே. (7)
உமாபதிசிவாசாரியர். 844 விரும்புசிவப் பிரகாசந் தவப்பிரகா சமிலா வெய்யயாங் களுமடையச் சிவப்பிரகா சத்தோ டரும்புபல நூலருளிச் செய்தவருஞ் குரவ னண்ணலுமா பதிசிவனை யஞ்சலித்துத் துதிப்பாம் பெரும்புலவர் பெரியோனென் றறிந்தேத்தப் பட்ட பின்னருமம் பலவாணப் பெயர்புனைந்த கள்வன் கரும்புகமு கெனவோங்கும் வயன்மலிதண் டுறைசைக் கண்ணமரண் ணலைநாளுங் காத்தருள்க வென்றே. (8)
அருணமச்சிவாயர். 845 இருண்மலமு மாயையுமற் றிருவினையுங் கழிந்தின் பெய்திடவெய் திடுமுயிர்கட் கினிதருளுந் திறத்தா லருணமச்சி வாயனெனக் காரணப்பேர் புனைந்த வண்ணலடித் தாமரைக ணண்ணல்குறித் திடுவாம் பொருண்மலிசெங் கொன்றையொடு வெள்ளெருக்கு மொப்பப் பொறுத்தபழங் காரணத்தா னலவர்துதி யொடுமித் தெருண்மலியா வெந்துதியுங் கொண்டுதுறை சையில்வாழ் தேசிகனம் பலவாணன் றனைக்காக்க வென்றே. (9)
சித்தர் சிவப்பிரகாசர். 846 தம்மடியர்க் கிருக்குமிடம் வரையறுத்துத் தெரித்துத் தமக்கிருக்கு மிடங்குறியா தெவ்விடத்தும் பயிலுஞ் செம்மனத்தா ராயினுமெஞ் சித்தத்து மமர்ந்த சித்தர்சிவப் பிரகாசர் சேவடிக டொழுவாஞ் செம்மலரும் வெண்மலரு மெடுத்தடியர் தூற்றச் சேவடிமேல் வீழ்தலிரு தேசிகரும் பலகா லம்மவணங் குதல்பொருவக் கோகழிவீற் றிருக்கு மம்பலவா ணனைநாள்க டொறுங்காக்க வென்றே. (10)
நமச்சிவாயமூர்த்திகள் முதலிய பதினால்வர். - வேறு. 847 புரவு மிகுவள் ளுவர்குறளுட் புணர்பத் தினுமுள் பொருளிதெனப் புகலு மொன்றிற் குருமூர்த்தம் புகல்பத் திலுமுள் பொருளிதென்று பரவு முலக முணர்ந்தேத்தப் படிவங் கொண்டு வெளிவந்த பண்பார் நமச்சி வாயர்முதற் பதினால் வரையுந் தொழுதெழுவாங் குரவு புனையா வருமிருகை கூப்பப் பொலியு மரசென நூல் குறியா வுணர்ச்சி யாளருமுட் கொண்டு தெளிதற் கறிகுறியா விரவு மரச வனத்தமர்ந்து விளங்கா நின்ற சின்மயனை மிக்க புகழம் பலவாண மேலோன் றனைக்காத் தருள்கவென்றே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|