|
||||||||
காதற் குதிரையும் அழுக்குப் பொதிசுமக்கும் கழுதைகளும் |
||||||||
நாணல்கள் எரிந்தனதான்
நாம் விட்ட பெருமூச்சு காடுகளும் எரிய
தீயாகிக் கொண்டதுதான்,
என் தேவீ!
என் இதயப் பசுந்தரையில் மேய்ந்த சிறுகுருவி!
வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம்.
உன் நுனிமூக்கில் தெரிகின்ற செந்நிறத்து மூக்குத்தி
இனியெந்த மதன்முகத்தைக் கிழிக்கும்?
என் கன்னத்தை அது கிழிக்கும்
காயங்கள் அதால் தோன்றும்.
காயத்தை உனது விரல் தடவும், உடனடியாய் ஆறும்
என்றெல்லாம் இரவுகளில்தான் நினைத்தேன்.
அந்தச் செந்நிறத்து மூக்குத்தி என் முகத்தைக் கிழிப்பதற்கு
உன் மூக்கும் தவிக்கையிலே முயற்சி பிழைத்தது பார்.
இது நுனிநாக்குக் காதலல்ல.
குட்டி நாக்கிலுமே சொற்பிறந்து சரசங்கள்
பொழிந்த காதல்தான், பிறை நெற்றி கண் மீன்கள்
என்று வர்ணிக்கத் தெரியாத கவிஞனிவன்,
உன் மனதை வர்ணித்தேன் மாளிகையை நானமைத்தேன்
ஒரு புறா வந்து உறங்காமல் துப்பரவாய் கவனித்தேன்
பார்
வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம்.
உன் செந்நிறத்து மூக்குத்தி, குதியுயர்ந்த செருப்பு
ஆங்கில வார்த்தைகள் "வெரிநைஸ்" உங்கள் கவி
என்ற பாராட்டு அத்தனையும் உயிர்பெற்று
இப்பொழுது என் பின்னால் வரவர கனவுகளில்
பாம்பு கடிக்கிறது, வெள்ளியுமே கருகி
என்மீது விழுகிறது, நீ....
காதற் குதிரையிலிருந்தும் விழுந்தோம்.
நம் பெயரால் அழுக்குப் பொதிசுமந்து
மனிதக் கழுதைகள் திரிகிறதே கண்ணே!
நாணல்கள் எரிந்தனதான் நாம் விட்ட பெருமூச்சு காடுகளும் எரிய தீயாகிக் கொண்டதுதான், என் தேவீ! என் இதயப் பசுந்தரையில் மேய்ந்த சிறுகுருவி! வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம்.
உன் நுனிமூக்கில் தெரிகின்ற செந்நிறத்து மூக்குத்தி இனியெந்த மதன்முகத்தைக் கிழிக்கும்? என் கன்னத்தை அது கிழிக்கும் காயங்கள் அதால் தோன்றும்.
காயத்தை உனது விரல் தடவும், உடனடியாய் ஆறும் என்றெல்லாம் இரவுகளில்தான் நினைத்தேன். அந்தச் செந்நிறத்து மூக்குத்தி என் முகத்தைக் கிழிப்பதற்கு உன் மூக்கும் தவிக்கையிலே முயற்சி பிழைத்தது பார்.
இது நுனிநாக்குக் காதலல்ல. குட்டி நாக்கிலுமே சொற்பிறந்து சரசங்கள் பொழிந்த காதல்தான், பிறை நெற்றி கண் மீன்கள் என்று வர்ணிக்கத் தெரியாத கவிஞனிவன், உன் மனதை வர்ணித்தேன் மாளிகையை நானமைத்தேன் ஒரு புறா வந்து உறங்காமல் துப்பரவாய் கவனித்தேன் பார் வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம். உன் செந்நிறத்து மூக்குத்தி, குதியுயர்ந்த செருப்பு ஆங்கில வார்த்தைகள் "வெரிநைஸ்" உங்கள் கவி என்ற பாராட்டு அத்தனையும் உயிர்பெற்று இப்பொழுது என் பின்னால் வரவர கனவுகளில் பாம்பு கடிக்கிறது, வெள்ளியுமே கருகி என்மீது விழுகிறது, நீ....
காதற் குதிரையிலிருந்தும் விழுந்தோம். நம் பெயரால் அழுக்குப் பொதிசுமந்து மனிதக் கழுதைகள் திரிகிறதே கண்ணே!
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|