LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

காத்திருக்கிறேன்

காதல் வந்து என்னைக் கொள்ள

கவிதை எழுதினேன்!



சொட்டும் கண்ணீரும் என்னை முட்ட

உருகிக் கரைகிறேன்!



தீயைக் கண்டு தென்றல் என்று

துணிந்து இறங்கினேன்!


என் சிறகு எரிந்து கருகிப்போக

என்னுள் அழுகிறேன்!



மாயை என்னும் உலகிலே

மயங்கி விழுகிறேன்!



காலம் வந்து கதைகள் சொல்ல

என்னை உணர்கிறேன்!



நேற்றுப் பூத்தப் பூவைப்போல

இன்று வாடினேன்!



நெஞ்சில் அவனை வைத்துக்கொண்டு

தினம் மன்றாடினேன்!



என்னை நானே அங்கும் இங்கும்

தேடி அலைகிறேன்!



என்னில் வாழும் அவனை எண்ணி

என்னை மறக்கிறேன்!



எந்தன் கண்ணில் நீர் கசிய

என்னை வடிக்கிறேன்!



வாடி வதங்கும் முன்னே

வாசம் தருகிறேன்!



நாள் கடந்து போகும் முன்னே

என்னைக் காண வா!



என் உயிர் பிரிந்து போகும் முன்னே

என்னை ஏற்க வா!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: காத்திருக்கிறேன்   Kaaththirukkiren   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Kaaththirukkiren Kavithai   Kavithai about Kaaththirukkiren  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.