LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்லாடம்

கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்

இருநிலம் தாங்கிய வலிகெழு நோன்மைப்
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து
திருவெனும் குழவியும் அமுதெனும் பிள்ளையும்
மதியெனும் மகவும் அமருலகு அறியக்
கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி     (5)

 

வாய்விட் டலறி வயிறுநொந் தீன்ற
மனன் எழு வருத்தம் அதுஉடையை ஆதலின்
பெருமயல் எய்தா நிறையினள் ஆக
என்ஒரு மயிலும் நின்மகளாக் கொண்டு
தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவம்     (10)

 

நிதிஎனக் கட்டிய குறுமுனிக்கு அருளுடன்
தரள மும் சந்தும் எரிகெழு மணியும்
முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும்
அகிலும் கனகமும் அருவிகொண் டிறங்கிப்
பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும்     (15)

 

செம்புடல் பொதிந்த தெய்வப் பொதியமும்
உவட்டாது அணையாது உணர்வெனும் பசியெடுத்து
உள்ளமும் செவியும் உருகிநின்று உண்ணும்
பெருந்தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த
தோடணி கடுக்கைக் கூடல்எம் பெருமான்     (20)

 

எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத்
தோன்றாது அடங்கிய தொன்மைத் தென்ன
ஆர்த்தெழு பெருங்குரல் அமைந்துநின் றொடுங்கிநின்
பெருந்தீக் குணனும் ஒழிந்துளம் குளிருறும்
இப்பெரு நன்றி இன்றெற்கு உதவுதி     (25)

 

எனின்பதம் பணிகுவல் அன்றே நன்கமர்
பவள வாயும் கிளர்பச் சுடம்பும்
நெடுங்கயல் விழியும் நிறைமலை முலையும்
மாசறப் படைத்து மணிவுடல் நிறைத்த
பெருமுகில் வயிறளவு ஊட்டித்
திருவுலரு அளிக்கும் கடல்மட மகளே!    (31)

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.